எங்களை ஊருக்கு அனுப்பி வையுங்கள்: சவுதியில் தவிக்கும் 110 இந்தியர்கள் தூதரகத்திற்கு கோரிக்கை
ரியாத்: சவுதியில் உள்ள தொழிலாளர் முகாமில் தவிக்கும் 110 இந்தியர்கள் தங்களுக்கு உதவி செய்யுமாறு இந்திய தூதரகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.
சவுதியில் இருக்கும் ஜுபைல் நகரில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்று 110 இந்தியர்களை கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்தது. அவர்களுக்கு அளிக்க வேண்டிய சம்பள பாக்கியையும் அளிக்கவில்லை. இதனால் அவர்கள் ஜுபைலில் உள்ள தொழிலாளர் முகாமில் போதிய வசதி இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இது குறித்து அந்த தொழிலாளர் முகாமில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். முருகன் கூறுகையில்,

கடந்த 2009ம் ஆண்டு நான் சவுதியில் உள்ள ஜுபைல் நகருக்கு வேலைக்கு வந்தேன். இந்நகரில் உள்ள அல் மோஜில் எம்எம்ஜி கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அந்த நிறுவனம் எங்களுக்கு சம்பள பாக்கியை அளிக்காமல் பணிநீக்கம் செய்துவிட்டது.
முகாமில் நிலைமை சரியில்லை. ஒரு அறையில் 10 பேர் தங்கியுள்ளோம். ஒரு நாளில் இரண்டு முறை மட்டும் உணவு அளிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டு காலமாக நாங்கள் இங்கு தான் உள்ளோம். எனக்கு ஊருக்கு திரும்பிச் சென்று குடும்பத்தாரை பார்க்க வேண்டும்.
என் சம்பளம் இல்லாமல் என் குடும்பம் கஷ்டப்படுகிறது. என் மனைவி காந்திமதி அவ்வப்போது சிறு சிறு வேலைகளுக்கு செல்வார். எனது மகன்கள் வினோத், விஜய் மற்றும் மகள் வித்யா ஆகியோருக்காக நான் இங்கு வேலைக்கு வந்தேன். அவர்கள் அனைவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிறுவனமோ இந்திய தூதரகத்தை அணுகுமாறு கூறுகிறது. ஆனால் நாங்கள் நாடு திரும்ப இந்திய தூதரகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
தங்களை ஊருக்கு அனுப்பி வைக்க இந்திய தூதரகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 110 தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications