எங்களை ஊருக்கு அனுப்பி வையுங்கள்: சவுதியில் தவிக்கும் 110 இந்தியர்கள் தூதரகத்திற்கு கோரிக்கை
ரியாத்: சவுதியில் உள்ள தொழிலாளர் முகாமில் தவிக்கும் 110 இந்தியர்கள் தங்களுக்கு உதவி செய்யுமாறு இந்திய தூதரகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.
சவுதியில் இருக்கும் ஜுபைல் நகரில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்று 110 இந்தியர்களை கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்தது. அவர்களுக்கு அளிக்க வேண்டிய சம்பள பாக்கியையும் அளிக்கவில்லை. இதனால் அவர்கள் ஜுபைலில் உள்ள தொழிலாளர் முகாமில் போதிய வசதி இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இது குறித்து அந்த தொழிலாளர் முகாமில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். முருகன் கூறுகையில்,

கடந்த 2009ம் ஆண்டு நான் சவுதியில் உள்ள ஜுபைல் நகருக்கு வேலைக்கு வந்தேன். இந்நகரில் உள்ள அல் மோஜில் எம்எம்ஜி கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அந்த நிறுவனம் எங்களுக்கு சம்பள பாக்கியை அளிக்காமல் பணிநீக்கம் செய்துவிட்டது.
முகாமில் நிலைமை சரியில்லை. ஒரு அறையில் 10 பேர் தங்கியுள்ளோம். ஒரு நாளில் இரண்டு முறை மட்டும் உணவு அளிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டு காலமாக நாங்கள் இங்கு தான் உள்ளோம். எனக்கு ஊருக்கு திரும்பிச் சென்று குடும்பத்தாரை பார்க்க வேண்டும்.
என் சம்பளம் இல்லாமல் என் குடும்பம் கஷ்டப்படுகிறது. என் மனைவி காந்திமதி அவ்வப்போது சிறு சிறு வேலைகளுக்கு செல்வார். எனது மகன்கள் வினோத், விஜய் மற்றும் மகள் வித்யா ஆகியோருக்காக நான் இங்கு வேலைக்கு வந்தேன். அவர்கள் அனைவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிறுவனமோ இந்திய தூதரகத்தை அணுகுமாறு கூறுகிறது. ஆனால் நாங்கள் நாடு திரும்ப இந்திய தூதரகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
தங்களை ஊருக்கு அனுப்பி வைக்க இந்திய தூதரகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 110 தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications