தாலிபான்களின் கோர முகம்.. உயிருக்கு அச்சுறுத்தல்.. 120 பெண் நீதிபதிகள் தலைமறைவு.. அதிர்ச்சி தகவல்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த அமெரிக்க படைகள் அங்கு இருந்து விலகிய பின்னர் தாலிபான்கள் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.
அவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஆப்கானில் தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
தாலிபான்களின் அடக்குமுறைக்கு பயந்து ஆப்கான் நாட்டினர் அங்கு இருந்து வெளியேறி வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்து விட்டனர். தாலிபான்கள் அதிகாரத்துக்கு வந்தபிறகு அங்கு பெண்களின் உரிமை தொடர்ந்து நசுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பெண் நீதிபதிகள்
இந்த நிலையில் தாலிபான்கள் வருவதற்கு முன்பு அங்கு 200 க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் பணிபுரிந்து வந்தனர். தற்போது அந்த பெண் நீதிபதிகள் பணியில்லாமல் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் சிலருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக சர்வதேச பெண்கள் நீதிபதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் உச்சநீதிமன்றத்தில் நபிலா என்ற பெண் நீதிபதியாக இருந்தார்.

கைதிகள் விடுவிக்கப்பட்டனர்
அப்போது கணவரால் பாதிக்கப்பட்ட பெண்கள், கணவரால் துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு விவாகரத்து வழங்கினார். இதில் குற்றம்சாட்டப்பட்ட பெரும்பாலான கணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின்பு நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதில் பெண் நீதிபதி நபிலாவால் தண்டனை பெற்று வந்த சில ஆண்களும் அடங்குவார்கள்.
Recommended Video

பெண் நீதிபதி உருக்கம்
தாலிபான்களின் அடக்குமுறையால் நீதிபதி நபிலாவும் பணியை விட நேர்ந்தது. அவர் தனது கணவர் மற்றும் மூன்று இளம் மகள்களுடன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி தலைமறைவாக உள்ளார். சில நாட்களுக்கு முன்னர் தன்னால் தண்டனை பெற்ற கைதிகளிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வர ஆரம்பித்ததாக நபிலா கூறியுள்ளார். ''நான் என் வேலையை இழந்தேன், இப்போது என்னால் வெளியே செல்லவோ அல்லது சுதந்திரமாக எதுவும் செய்யவோ முடியாது, ஏனெனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளால் எனக்கு ஆபத்து உள்ளது'' என்று உருக்கமுடன் கூறுகிறார் பெண் நீதிபதி நபிலா.

பெண்களுக்கு இருண்ட காலம்
நீதிபதி நபிலாவை தவிர குடும்ப வன்முறை மற்றும் விவாகரத்து வழக்குகளில் சட்டப்படி பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்கிய பல்வேறு பெண் நீதிபதிகள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் அனைவருக்கும், குறிப்பாக பெண் நீதிபதிகளுக்கு இருண்ட எதிர்காலம் காத்திருக்கிறது என்று நீதிபதி ஒருவர் கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications