தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.4ஆக பதிவு.. குலுங்கிய கட்டடங்கள்.. என்ன நடந்தது?
தைபே: தைவான் நாட்டில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகி இருந்த நிலையில், தைபேவில் இருந்த ஏராளமான கட்டடங்கள் குலுங்கி இருக்கின்றன. இதுவரை உயிர் பலி எதுவும் இல்லை என்றாலும், பல்வேறு கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தைவான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சியாய் அருகே நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தைபேவில் இருந்த பல்வேறு கட்டடங்களும் குலுங்கி இருக்கின்றன. இந்த நிலநடுக்கம் சியாய் பகுதியில் உள்ள டாபு நகரின் 9.4 கிமீ ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தைபேவில் உள்ள சிப் தயாரிக்கும் நிறுவனமான டிஎஸ்எம்சி தொழிற்சாலைகளிலிருந்து ஊழியர்களை வெளியேறினர். இதுகுறித்து தீயணைப்புத் துறை தரப்பில் கூறுகையில், சியாய் நகரில் சிலர் சேதமடைந்த கட்டமைப்புகளில் சிக்கிக் கொண்டனர். இருப்பினும் அவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டதால் எந்த சிக்கலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் எந்தவொரு பெரிய உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனால் நிலநடுக்கம் கண்டறியப்பட்ட டாபு பகுதியில், சில கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், சில கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் தீயணைப்புத் துறையினர் தரப்பில், சேதத்தின் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
1906ஆம் ஆண்டு சியாய் அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 1,200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 1999ஆம் ஆண்டு நான்டவ் கவுண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கமே தைவானில் ஏற்பட்ட பேரழிவாகும். இந்த நிலநடுக்கத்தால் மட்டும் 2,500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications