துபாயில் மதுபான பாரில் பக்கத்தில் இருந்த நபரை தொட்ட பிரிட்டன் சுற்றுலா பயணிக்கு 3 ஆண்டு சிறை!
துபாயில் மதுபான பாரில் பக்கத்து நபரை தொட்டதால் பிரிட்டன் சுற்றுலா பயணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
துபாய் : துபாயில் பார் ஒன்றில் மது அருந்திய போது தவறாக கை பட்டதால் பிரிட்டன் சுற்றுலா பயணி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
துபாயில் ''ராக் பாட்டம்'' என்ற தனியார் பாரில் மதுகுடித்த போது ஜேமி ஹார்ரன் என்ற பிரிட்ட சுற்றுலா பயணி பக்கத்தில் இருந்த நபரை தொட்டு உள்ளார். இதையடுத்து பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக பிரிட்டன் சுற்றுலா பயணி மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜேமி ஹார்ரனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தனர். பிரிட்டன் குடிமகனான ஜேமி ஹார்ரன் கடந்த மூன்று மாதமாக துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீனில் வெளியே வருவதற்கு மட்டும் 30,000 யூரோ செலவிட்டுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் 23 லட்சம் ரூபாய் ஆகும். கடும் முயற்சிகளுக்குப் பின் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த ஜேமி, துபாயில் இப்படி ஒரு சட்டம் இருப்பதே எனக்கு தெரியாது. நான் அந்த நபரை தெரியாமல் தான் தொட்டேன். அவர் வழியில் நின்றதால் மட்டுமே அவரைத் தொட நேர்ந்தது என்று கூறியுள்ளார்.
துபாயில் பொதுவாக வெளிநாட்டினர் மீது கடுமையான சட்டங்கள் பிரயோகப்படுத்தப் படுவதாக பலமுறை குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது மிகவும் கொடூரமான, மனித தன்மையற்ற செயல் என்று பிரிட்டன் அரசு சாடியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications