ஜப்பான் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.3 பதிவு.. தீவிர கண்காணிப்பு
Subscribe to Oneindia Tamil
டோக்யோ: ஜப்பான் அருகே உள்ள இசு தீவில் இன்று காலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது கடலின் சுமார் 409 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. பொதுவாக இம்மாதிரியான நிலநடுக்கம் ஏற்பட்டால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் தற்போது வரை எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

ஆனால் கடல் பகுதியும், கடற்கரை பகுதிகளும் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமாயின் அது குறித்த அறிவிப்புகள் உடனடியாக வெளியிடப்படும் என்றும் ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீவுகளில் எரிமலைகள் ஆக்டிவாக இருக்கின்ற நிலையில் இந்த நிலநடுக்கம் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications