காது அடைக்கும் பசி.. கதறும் பிஞ்சுகள்.. பட்டினி பிடியில் ஆப்கன்.. நாடுகளின் உதவி நாடும் தாலிபன்கள்
நார்வே நாட்டிடம் நிதி உதவி கோருகிறது ஆப்கானிஸ்தான்
காபூல்: உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு கெத்தாக ஆட்சியை பிடித்த தாலிபன்கள், இன்று உலக நாடுகளிடமே சாப்பாட்டுக்காக கையேந்தும் நிலைமைக்கு ஆளாகிவிட்டனர்..!
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது உணவு பஞ்சத்தில் சிக்கியுள்ளது. அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பல லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் குளிர்காலத்தில் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் வருடம் மாதம் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்றது... அவர்கள் நாட்டை கைப்பற்றியதில் இருந்தே பெண்கள் மீதான வன்முறைகள், தாக்குதல்கள், கெடுபிடிகள் அதிகரித்து வருகிறது.

நிதி நெருக்கடி
இதற்கு நடுவே நிதி நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் சிக்கி கொண்டது.. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருந்தது அந்த நாடு.. பிறகு நிலைமை மேலும் மோசமானது... ஆட்சியில் அமர்ந்தும்கூட, அரசு ஊழியர்களுக்கு அவர்களால் சம்பளம் கொடுக்கப்படாமல் உள்ளது... இதுபோக மேற்கத்திய நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான உதவியை நிறுத்திவிட்டன.. உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் பணம் செலுத்துவதையும் நிறுத்தி கொண்டன..

பசி, பஞ்சம்
இதனால் அந்த நாட்டில் பசியும், பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. ஒருவேளை சாப்பாட்டுக்காக, தங்கள் வீட்டு பெண் குழந்தைகளை விற்கும் நிலைமைக்கு ஆப்கன் மக்கள் ஆளாகி விட்டனர். இதையெல்லாம் முன்கூட்டியே அறிந்துதான், 3 மாதங்களுக்கு முன்பே ஐநாவும் எச்சரித்திருந்தது.. யாருமே எதிர்பார்த்ததை விட வேகமாக காபூல் வீழ்ச்சியடைந்தது, பொருளாதாரம் அதை விட வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.. குழந்தைகள் எல்லாம் சாக போகிறார்கள்... மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். நிலைமை இன்னும் மோசமாக போகிறது" என்ற தெரிவித்திருந்தது..

நிதி நெருக்கடி
இதையடுத்து, மனிதாபிமான செயல்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதற்கெல்லாம் காரணம், ஆப்கானிஸ்தானின் சரியான பொருளாதார திட்டமிடல் இல்லை என்று விமர்சிக்கப்பட்டது.. இப்போது, அமெரிக்கா, இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளிடம் தலிபான்கள் கையேந்தி நிற்கிறார்கள்.. முடிந்தவரை நாடுகள் ஆப்கனுக்கு உதவினாலும், அவர்களின் உணவுப்பற்றாக் குறையை முழுமையாக தீர்க்க முடியாமல் உள்ளது..

கோதுமை
அதனால்தான், ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த மாதம் இந்தியா கோதுமையை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.. ஆனால் அதுவரை நிலைமையை அங்கே சமாளிக்க வேண்டிய உள்ளது.. அதனால், தங்களுக்கு உதவுமாறு நார்வே நாட்டிடம் உதவி கேட்டுள்ளர்கள் தாலிபன்கள்.. இது தொடர்பாக தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள்.. மேலும், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் தலைமையில் ஒரு குழு நார்வேவுக்கு நேரடியாகவே சென்றுள்ளது..

குழுக்கள்
இதைதவிர, ஐநாவிடமும் தாலிபான்கள் உணவு கேட்டு குழு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.. ஆசை ஆசையாய் நாட்டை கைப்பற்றியும், தாலிபான்களால் மக்கள் விரும்பும் வகையிலான ஆட்சியை தர முடியவில்லை என்பதுடன், சாப்பாட்டுக்காக மற்ற நாடுகளிடம் கையேந்தும் நிலைமைக்கும் ஆளாகிவிட்டன.. இதில் பரிதாபமாக சிக்கி கொண்டுள்ளது தாலிபனின் அப்பாவி பொது மக்களும், அந்த பிஞ்சுகளும்தான்..!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications