புதிய பிரச்சனை! இது வேறயா? திடீரென உருமாற்றம் அடையும் குரங்கு அம்மை? WHO சொல்வது என்ன?
ஜெனீவா: கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸின் மரபணு மாற்றங்கள்தான் தொற்று வேகமாக பரவ காரணமாக உள்ளதா? எனும் கோணத்தில் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Recommended Video
உலக சுகாதார மையம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2 வாரங்களில் இந்த குரங்கு அம்மை தொற்று பாதிப்பு வேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை சுமார் 92 நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளது.

உலக சுகாதார மையம்
கடந்த 2019ல் தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பானது உலகம் முழுவதும் சுமார் 64.4 லட்சம் மனிதர்களை பலிவாங்கியுள்ளது. இதுவரை 59 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி உயிரிழப்பை வெகுவாக குறைத்துள்ள நிலையில், தற்போது இந்த குரங்கு அம்மை தொற்று பாதிப்பு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸில் ஏற்பட்டுள்ள மரபணு மாற்றங்கள்தான் இத்தொற்று வேகமாக பரவ காரணமாக உள்ளதா? எனும் கோணத்தில் விஞ்ஞானிகள் ஆய்வுகளை அதிகரித்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

பிரிவுகள்
இந்த வைரஸ் தொற்று இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, காங்கோ மற்றும் மேற்கு ஆப்ரிக்கா என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கிளேட் I மற்றும் கிளேட் II என அழைக்கப்படுகிறது. இது இத்துடன் நின்றுவிடவில்லை. கிளேட் II வைரஸ் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த கிளேட் IIக்கு IIa மற்றும் IIb என்ற இரண்டு துணைப்பிரிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் கிளேட் IIb என கண்டறியப்பட்டுள்ள வைரஸ் கிளேட் IIa என்பதின் பிரிவு அல்ல.

ஆய்வு
இந்த கிளேட் IIb வைரஸ்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது 1970 இதேபோன்ற வைரஸ் ஒன்றுடன் சில ஒப்புமைகள் இந்த கிளேட் IIb உடன் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை பாதிப்புக்கான காரணம் இந்த மரபணு மாற்றமா அல்லது மனிதர்கள் மூலம் பரவுகிறதா என்பது குறித்த ஆராய்ச்சிகள் தீவிரமடைந்து வருகின்றன. எனினும் இந்த ஆய்வுகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. மனிதனின் நோயெதிர்ப்பு திறனுடன் இந்த மரபணு மாறிய வைரஸ்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா
ஆப்ரிக்கா நாடுகளில் இந்த நோய்த்தொற்று கடந்த மே மாதத்தில் தீவிரமாக பரவி வருவது கண்டறியப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே அமெரிக்காவில் இந்த தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் இந்த தொற்று குறித்து 'அவசர நிலையை' உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 92 நாடுகளில் 35,000க்கும் அதிகமானோர்களை இந்த குரங்கு அம்மை தொற்று பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications