அமெரிக்காவில் கடிகாரம் செய்ததால் கைது செய்யப்பட்ட மாணவர் கத்தாரில் குடியேறுகிறார்!
வாஷிங்டன்: கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவர் அகமது முகமது மேற்படிப்பை முன்னிட்டு குடும்பத்துடன் கத்தார் நாட்டில் குடியேற உள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், இர்விங் நகரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர் அகமது முகமது. சூடான் வம்சாவளியைச் சேர்ந்த அகமது புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இதன் எதிரொலியாக பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக கடிகாரம் ஒன்றைச் செய்து அதனை தனது வகுப்பு ஆசிரியரிடம் பெருமையாக காட்டியுள்ளான் அகமது.

ஆனால் அவருக்கு கிடைத்தது பாராட்டு அல்ல. அதனை வெடிகுண்டு எனத் தவறுதலாக புரிந்து கொண்ட ஆசிரியர், உடனடியாக பள்ளிக்கு போலீசாரை அழைத்துள்ளார். உடனே அகமது கைது செய்யப்பட்டார்.
பின்னர் காவல் நிலைத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையில், சிறுவன் மீது தவறு ஏதும் இல்லை உண்மையிலேயே அது கடிகாரம்தான் எனத் தெரியவந்ததையடுத்து அகமது விடுவிக்கப்பட்டார்.
பின்னர் அகமதுவுக்கு ஆதரவு பெருக ஜோர்டான், துருக்கி, சூடான் நாட்டுத் தலைவர்களையும் சந்தித்தார். இதையடுத்து அகமதுவுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், அவரை வெள்ளை மாளிகைக்கு விருந்துக்கு வருமாறு அதிபர் ஒபாமா டுவிட்டர் வலைதளம் மூலம் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, அதிபர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விண்வெளி அறிஞர்கள் விருந்தில் அகமது முகமது கலந்து கொண்டார். அப்போது, அமெரிக்க அதிபர் ஒபாமா சிறுவனை கட்டி அணைத்து சிறுது நேரம் பேசினார்.
இந்நிலையில், அகமது முகமதுவின் மேற்படிப்புக்காக கத்தார் நாட்டில் குடியேறப் போவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அகமது கூறுகையில், கத்தாரில் உள்ள தோகா நகரத்தை தாம் அதிகமாக நேசிப்பதாகவும், இங்கு சிறந்த பள்ளிகள் இருப்பதாகவும் அதன்மூலம் தாம் கற்றுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications