For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்புமணி 4 சிஎம்! கத்தார் உலக கோப்பை மேட்சில் ஜொலித்த பேனர்! கொண்டாடும் பாட்டாளி மக்கள் கட்சியினர்!

Google Oneindia Tamil News

தோஹா : கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் 'அன்புமணி 4 சிஎம்' என்ற பதாகையை தாங்கிப் பிடித்த புகைப்படம் மற்றும் வீடியோவை பாட்டாளி மக்கள் கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் கட்சியில் எதிர்கால நலன் கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைவராக பதவியேற்றார்.

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் பல வியூகங்களை வகுக்க பாமக தரப்பு தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் பல்வேறு நிலைகளில் சீர்திருத்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Fact Check ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியை காண 50 ஜிபி டேட்டா இலவசமா? நம்பாதீங்க பொய் செய்தி! Fact Check ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியை காண 50 ஜிபி டேட்டா இலவசமா? நம்பாதீங்க பொய் செய்தி!

பாமக

பாமக

நாடாளுமன்ற தேர்தலில் பாமக எந்த கட்சியுடன் கூட்டணி சேரும் என விவாதங்களும் எழுந்திருக்கிறது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தான் அன்புமணி சிந்தித்து வருவதாக கூறுகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகிகள் சிலர் நாடாளுமன்றத் தேர்தலை வியூகம் அமைப்பதற்கான ஒரு பகுதியாகவே நினைக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையிலான ஆட்சி அமைப்பது அன்புமணியின் இலக்கு. அதற்காக பல்வேறு நிலைகளில் நிர்வாகிகள் தொண்டர்களை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் பாமக நிர்வாகிகள்.

 அன்புமணி4சிஎம்

அன்புமணி4சிஎம்

தற்கான பணிகளும் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் தென் மாவட்டங்களிலும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கும் அன்புமணி வட மாவட்டங்களைப் போல தென் மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என எண்ணுகிறார். இதற்காக இளைஞர் படையும் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பாமகவினர் சமூக வலைதளங்களில் அன்புமணி4சிஎம் என சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.

 உலககோப்பை கால்பந்து

உலககோப்பை கால்பந்து

இந்நிலையில் கத்தாரில் நடைபெறும் உலககோப்பை கால்பந்து போட்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்று 'அன்புமணி4சிஎம்' என்ற பேனரை உயர்த்தி பிடித்துள்ளதை பாமகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன.

பேனர்

பேனர்

8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக நாக் - அவுட் சுற்றுகள் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தான் கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து போட்டிகளைப் பார்ப்பதற்காக மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் சென்றுள்ளார். போட்டி நடக்கும் போது கால்பந்து மைதானத்தில் 'அன்புமணி4சிஎம்' என்ற பேனரை உயர்த்தி பிடித்துள்ளார். தற்போது அந்த பேனரைத் தான் பாமகவினர் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

English summary
A photo and video of a youth from Mayiladuthurai holding a banner of 'Anbumani 4 CM' is being circulated on social media while the Football World Cup is being held in Qatar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X