பாலியல் குற்றம்: 588 வீரர்களை நீக்கிய அமெரிக்க ராணுவம்
வாஷிங்டன்: அமெரிக்க ராணுவம் அதிரடியாக 588 படை வீரர்களை சில முக்கியப் பொறுப்புகளிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிப்பாக பாலியல் தாக்குதல் தொடர்பான ஆலோசகர்கள், வேலை நியமனப் பொறுப்பில் இருப்போர் இதில் அடங்குவர். இவர்கள் மீது குடித்து விட்டு வாகனம் ஓட்டியது, சிறார்களை அடித்துத் துன்புறுத்தியது, பாலியல் தாக்குதல்கள், உள்ளிட்ட புகார்கள் வந்ததால் இவர்களை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல் உத்தரவின் பேரில் இவர்கள் மாற்றப்பட்டுள்ளனராம். அமெரிக்க ராணுவத்தில் பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன. அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாறுதல்கள் உள்ளன.
20 ஆயிரம் பேரில்....
கிட்டத்தட்ட 20,000 வீரர்களின் ஆவணங்கள், அவர்களின் நடத்தை, மீதான புகார்கள் ஆகியவற்றை ராணுவம் பரிசீலித்து அதிலிருந்து இந்த 588 பேரை மட்டும் நீக்கியுள்ளது.
ஆசிரியர்களும் அடக்கம்...
ராணுவப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணி புரிவோரும் கூட இதில் அடக்கமாம்.
தெளிவான விவரமில்லை...
தற்போது இவர்களுக்கு வேறு வேலை தரப்பட்டுள்ளதா அல்லது வேலையை விட்டே விரட்டியடிக்கப்பட்டார்களா என்பது தெரியவில்லை.
முக்கியப்பணி...
இந்த நடவடிக்கை குறித்து லெப்டினென்ட் கர்னல் அலயென் கோன்வாய் கூறுகையில், இந்தப் பதவிகளுக்கு மிகச் சிறந்தவர்கள் தேர்வு செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். இந்தப் பணியானது எவ்வளவு முக்கியம் என்பதை இதில் உள்ளவர்கள் உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
கடற்படையில் 5 பேர்...
இதேபோல கடற்படையில் 11,000 ஊழியர்களைப் பரிசோதித்து அதில் 5 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனராம். விமானப்படையில் இதுபோன்ற பிரச்சினை வரவில்லை என்று தெரிகிறது.
களையெடுப்பு...
கடந்த ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் பல பாலியல் புகார்கள் படையெடுத்துக் கிளம்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இதையடுத்தே தற்போது களையெடுப்புப் பணிகள் நடந்துள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications