'இத்தனைக்கு மத்தியிலும் ஒர் பூ பூக்கத்தானே செய்கிறது' - உக்ரைன் போர்முனையில் காதலை சொன்ன ராணுவ வீரர்
கீவ்: உக்ரைனில் போர் நடந்து வரும் சூழலில், ராணுவ உடை அணிந்துவந்த ரஷ்ய வீரர் தன்னுடைய காதலியிடம் மண்டியிட்டு ப்ரபோஸ் செய்திருக்கிறார்.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால், உக்ரைன் நாட்டைவிட்டு ஒரு மில்லியன் மக்கள் சென்றுள்ளார்கள்.
மக்கள் உக்ரைனை விட்டு வெளியேற உதவியாக முக்கிய நகரங்களில் போரை நிறுத்தியுள்ளது ரஷ்யா.
ஒரு முடிவுக்கு வாங்க.. உக்ரைனில் கதிகலங்கும் மக்கள்.. 3வது போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..!
சோதனை
உக்ரைன் எல்லையில் வரும் வாகனங்களை சோதனை செய்து அனுப்பி வருகிறது உக்ரைன். இந்நிலையில் நேற்று, உக்ரைன் வாகன சோதனை நடக்கும் இடத்தில் ஒரு கார் வந்து நிற்கிறது. அதில் இருந்து இறங்கியவர்கள், கையை முன்னால் வைத்து கார் மீது சாய்ந்து நிற்க வைத்தனர். அப்போது காருக்குள்ளும், அந்த நபர்களிடமும் சோதனை நடந்தது.
மண்டியிட்டு ப்ரபோஸ்
சோதனை நடந்துகொண்டிருந்தபோதே, காரின் பின் கதவு பக்கம் சாய்ந்து நின்றிருந்த பெண்ணை, அங்கிருந்த ராணுவ அதிகாரி ஒருவர் திரும்பச் செய்தார். ராணுவ உடையிலேயே மண்டியிட்டு கையில் இருந்த மோதிரத்தை நீட்டினார். இதை சற்றும் எதிர்பாராத அந்தப் பெண், திக்குமுக்காடிப்போனார். அதற்குள் அங்கிருந்த அனைவரும் ஒன்றுகூடிவிட்டனர்.
காதல்
மண்டியிட்டு, தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார் அந்த உக்ரைன் ராணுவ வீரர். மற்றொரு கையில் இருந்த பூங்கொத்தை கொடுத்து, தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளச் சொன்னார். அந்தப் பெண், தன்னோடு வந்திருந்த குடும்பத்தையும், காதலை வெளிப்படுத்தும் ராணுவ வீரரையும் மாறி மாறி பார்த்து வெட்கப்பட்டாள்.
வாழ்த்து
ராணுவ வீரனின் கையில் இருந்த பூங்கொத்தை வாங்கி, அந்த காதலை ஏற்றுக்கொண்டாள். இருவரும் ஆரத்தழுவி தங்கள் காதலை பரிமாறிக் கொண்டார்கள். அந்த பெண்ணின் வீட்டாரும் இதைப் பார்த்து மகிழ்ச்சியில் இருந்தனர். ராணுவ வீரரின் நண்பர்களான சக ராணுவ வீரர்கள், சந்தோஷத்தில் வாழ்த்திப் பாடினார்கள். இந்த போர் களத்திலும் ஒரு பூ பூக்கத்தானே செய்து என சமூக வல்லைதளங்கள் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறது.