சோமாலியாவில், ஹோட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கி சூடு.. 14 பேர் பரிதாப சாவு
மொகதிசு: சோமாலியாவில், ஹோட்டல் ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில், 14 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகதிசு நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நுழைவாயில் மீது நேற்று மனித வெடிகுண்டு தீவிரவாதி ஒருவன், வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தால் மோதினான். அதனால் எழுந்த குழப்பத்தை பயன்படுத்தி, துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சிலர் ஹோட்டலுக்குள் புகுந்தனர்.
உள்ளே சென்ற தீவிரவாதிகள், அங்கு தங்கி இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.

பிணைக்கைதிகள்
பாதுகாப்பு படையினர் வந்ததும், தீவிரவாதிகள், அங்கு தங்கி இருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டனர். பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளையும் வீசினர்.

14 பேர் சாவு
மோதலில் பாதுகாப்பு படை வீரர், பொதுமக்கள் என மொத்தம் 14 பேர் பலியானார்கள், 12க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளிடம் இருந்து ஹோட்டலை மீட்டுள்ளனர். கடைசி தீவிரவாதியையும் சுட்டு வீழ்த்திவிட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

எம்.பிக்கள் கொலை
சோமாலியாவில் மேற்கத்திய நாடுகள் ஆதரவுடன் அரசு செயல்பட்டு வருவதாக கூறி அதை கலைக்க வேண்டும் என்பதற்காக, அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு தொடர்ந்து கொலை தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் இதேபோல ஒரு ஹோட்டலில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி இரு நாடாளுமன்ற எம்.பிக்கள் உட்பட 15 பேரை கொன்று குவித்தனர்.

தப்பியோடிய நபர்கள்
நேற்றைய, துப்பாக்கி சூட்டை நேரில் பார்த்த அலி முகமது கூறுகையில், இலக்கு இன்றி அனைவருக்கு எதிராகவும் துப்பாக்கியால் தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதை பார்க்க முடிந்தது. நான் பின் கதவு வழியாக தப்பியோடிவிட்டேன் என்றார்.

ஆம்புலன்சில் பாதுகாப்பு
ஆம்புலன்ஸ் டிரைவர் யூசுப் அலி கூறுகையில், ஹோட்டலில் காயமடைந்திருந்த 11 பேரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தேன் என்றார்.

ரத்தம் பார்த்தும் பயமில்லை
தீவிரவாதிகள் ஹோட்டலுக்குள் வந்ததும், அல்லாகு அக்பர் என கத்திக்கொண்டே, கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், தான் பின்வாசல் வழியாக வெளியே ஓடி தப்பியதாகவும் பெயர் தெரிவிக்க அஞ்சிய ஹோட்டல் ஊழியர் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். சாவையும், ரத்தத்தையும் பார்த்து நடுங்காத பிசாசுகள் போல அவர்கள் இருந்தனர் எனவும், அந்த நபர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications