சீனாவின் ஜின்ஜியாங்கில் முஸ்லீம் அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் நோன்பு இருக்க தடை
பெய்ஜிங்: சீனாவின் ஜிங்ஜியாங் பகுதியில் வசிக்கும் முஸ்லீம் அரசு அதிகாரிகள், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருக்க தடை வித்து அரசு இணையதளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி நாத்திகத்தை பின்பற்றுகிறது. இந்நிலையில் சீன அரசு சிறுபான்மையினரான உய்குர் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜின்ஜியாங் நகரில் நோன்பு இருக்க பல ஆண்டுகளாக தடை விதித்துள்ளது. ஜின்ஜியாங்கில் உய்குர் மக்களுக்கும், மாநில பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது பயங்கர மோதல்கள் ஏற்படும்.
இந்நிலையில் உய்குர்கள் மற்றும் பிற முஸ்லீம்கள் மீது அதிக கட்டுப்பாடு விதிக்கப்படுவதால் தான் பிரச்சனைகள் ஏற்படுவதாக வலதுசாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இணையதளங்கள்
கடந்த சில நாட்களாக பல்வேறு அரசு துறைகள் தங்களின் இணையதளங்களில் முஸ்லீம்கள் நோன்பு வைக்க தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. டர்பான் நகர வியாபார விவகாரத்துறையின் இணையதளத்தில் கடந்த திங்கட்கிழமை அறிவித்திருப்பதாவது, அரசு அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் நோன்பு இருக்கவோ, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ கூடாது என்று தெரிவித்துள்ளது.

நோன்பு
ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் யாரும் ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கக் கூடாது என்று காரகாஸ் கவுன்ட்டியில் உள்ள வானிலை மையம் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.

தடை
அரசியல் கட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், இளம் வயதினர் ரமலான் நோன்பு இருக்க தடை விதிக்கப்படுகிறது என்று அரசு நடத்தும் போசோ ரேடியோ மற்றும் டிவி பல்கலைக்கழக இணையதளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல் நலம்
அரசு ஊழியர்களின் உடல் நலத்தை காக்க தான் இவ்வாறு நோன்பு இருக்க தடைவிதிக்கப்படுவதாக அரசு முன்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பு
அரசு அதிகாரிகள் உய்குர் மக்கள் ரமலான் மாதத்தில் பகல் வேளையில் உணவு சாப்பிட ஊக்குவிப்பதுடன் யாராவது நோன்பு இருக்கிறார்களா என்று வீடு வீடாக சென்று சோதனை இடுகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications