அமெரிக்கா ஜெனரல் மோட்டார்ஸின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவாரா
அமெரிக்கா நிறுவனத்தின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த திவ்யா சூர்யதேவாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்: சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா என்ற பெண் அமெரிக்க கார் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்.
இந்தியாவின் மற்றொரு பெருமைமிகு தருணமாக இது உள்ளது. மிகப்பெரிய கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக திவ்யா சூர்யதேவரா பதவியேற்கவுள்ளார்.

நிதி மந்திரவாதி என அறியப்படும் திவ்யா சூர்யதேவரா, தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் உள்ள சக் ஸ்டீவன்ஸ் செப்டம்பர் 1 ம் தேதி ஓய்வு பெறுவதை தொடர்ந்து அந்த பொறுப்பை வகிக்கவுள்ளார்.
திவ்யா சூர்யதேவரா மேரி பார்ராவின் வழியை பின்பற்றுவார். அவர் நிறுவனத்தின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
திவ்யா இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். சென்னை பல்கலை கழகத்தில் வர்த்தக படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளை முடித்து உள்ளார்.
அவர் தனது 22வது வயதில் ஹார்வர்டு பல்கலை கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு எம்பிஏ படித்து முடித்தார்.
முதலில் முதலீட்டு வங்கியான யுபிஎஸ் வங்கியில் முதலில் பணியாற்றிய அவர், பின்னர் ஓராண்டு கழித்து தனது 25வது வயதில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இணைந்தார்.
அதற்கு பின் திவ்யாவின் வாழ்வில் ஒரே ஏற்றம்தான். 2016ஆம் ஆண்டின் கிரெய்ன்ஸ் டெட்ராய்ட் பிஸ்னஸின் 40 வயதுக்கு உட்பட்ட 40 வெற்றியாளர் பட்டியலில் இடம்பிடித்தார் திவ்யா.
திவ்யாவின் அனுபவம் மற்றும் அவரது தலைமையின் பல முக்கிய பாத்திரங்கள் தங்களின் நிதி செயல்பாடுகள் முழுவதும் கடந்த பல வருடங்களாக வலுவான வர்த்தக முடிவுகளை எடுப்பதற்கு மிக நன்றாக அமைந்துள்ளது "என்று ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா தெரிவித்தார்.
இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவரும் மேரி பார்ரா என்ற பெண் ஆவார். கடந்த 2014ம் ஆண்டில் இருந்து அவர் இந்த பதவியில் இருந்து வருகிறார்.
இதேபோன்று தலைமை நிதி அதிகாரியாகவும் ஒரு பெண் இருந்ததில்லை. 39 வயதான கடந்த 2017ம் ஆண்டில் இருந்து இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் நிதி பிரிவின் துணை தலைவராக திவ்யா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications