பெட்ரோல், டீசல் கார்களுக்கு சீனாவில் தடை?
கார்களுக்கான உலகின் மிகப்பெரிய சந்தையாகத் திகழும் சீனா, பெட்ரோல் மற்றும் டீசல் வேன்கள் மற்றும் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்யத் திட்டமிட்டு வருகிறது.
இது தொடர்பான ஆய்வுகளைத் தொடங்கி விட்டதாகவும், ஆனால் இந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அந்நாட்டு தொழில் துறை இணை அமைச்சர் ஷின் குவோபின் கூறியுள்ளார்.
இந்த முடிவு சீன கார் உற்பத்தித் துறையின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று அவர் கூறியுள்ளதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான சின்ஹுவா கூறியுள்ளது.
- ஃபிரான்ஸ் அதிரடி: பெட்ரோல், டீசல் கார்களுக்கு வருகிறது ஒட்டுமொத்த தடை
- உலகின் அதிவேக ரயிலை மீண்டும் களம் இறக்கியது சீனா
கடந்த ஆண்டு மட்டும் சீனாவில் 2 கோடியே 80 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இது உலகின் ஒட்டுமொத்த கார் உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒரு பங்காகும்.
சுற்றுச்சூழல் மாசு மற்றும் கரியமில வாயு வெளியேற்றதைக் கட்டுப்படுத்தடீசல் மற்றும் பெட்ரோல் கார் உற்பத்தியை 2040-ஆம் ஆண்டுவாக்கில் நிறுத்தவுள்ளதாக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அரசுகள் ஏற்கனவே கூறியுள்ளன.
2019-ஆம் ஆண்டில் இருந்து, தங்கள் நிறுவனத்தின் கார்கள் அனைத்திலும் மின் பொறி இருக்கும் என்று கடந்த ஜூலை மாதம் சீன கார் நிறுவனமான வோல்வோ கூறியுள்ளது.
மற்ற சர்வதேச கார் உற்பத்தி நிறுவனங்களும் மின் ஆற்றலில் இயங்கும் கார்களை சீனாவில் உற்பத்தி செய்வது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன.
2025-இல் மின் ஆற்றலில் இயங்கும் கார்கள், மற்றும் மின் சக்தியில் இயங்குவதற்கான பொறிகளை உடைய பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் ஆகியன தங்கள் நாட்டில் உள்ள கார்களில் குறைந்தது ஐந்தில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.
பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது இடத்தில இருக்கும் சீனாவில் இந்த மாற்றம் பெட்ரோலிய பொருட்களின் தட்டுப்பாட்டைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறது.
பிற செய்திகள்
- இர்மா சூறாவளி: ஃபுளோரிடா மாகாண மேற்கு கரையில் கடும் பாதிப்பு
- அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை : சென்னை உயர் நீதிமன்றம்
- எகிப்து: 3600 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல்கள் கண்டுபிடிப்பு
- இறந்த 13 வயது சிறுமியின் உறுப்புகள் 8 பேருக்கு தானம்
- பத்தே நொடிகளில் புற்றுநோய் திசுக்களை கண்டறியும் 'பேனா'
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!














Click it and Unblock the Notifications