லடாக் மோதலில் எங்கள் வீரர்கள் கொல்லப்பட்டது உண்மை- எண்ணிக்கை குறைவு- சீனா அரசு ஊடகம் ஒப்புதல்!
பெய்ஜிங்: லடாக் கிழக்குப் பகுதியில் இந்தியா ராணுவத்துடனான மோதலில் சீனா வீரர்கள் கொல்லப்பட்டதும் உண்மைதான்; ஆனால் இந்தியா தெரிவித்திருக்கும் எண்ணிக்கையைவிட குறைவுதான் என சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறது.
லடாக் கிழக்குப் பகுதியில் சீனா ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.
அப்போது நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 முதல் 60 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் சீனா இதுவரை அதிகாரப்பூர்வமாக உயிரிழப்பு எண்ணிக்கையை அறிவிக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் ராஜ்நாத்சிங் அறிக்கை
இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் லோக்சபா, ராஜ்யசபாவில் எல்லை மோதல் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விரிவான அறிக்கைகளைத் தாக்கல் செய்தார். அதில் சீனாவின் ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதை விவரித்தார்.

எல்லையில் பதிலடி
மேலும் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்; இந்திய வீரர்கள் உயிரைத் தியாகம் செய்த போதும் சீன ராணுவத்தினருக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தியிருந்தனர் என ராஜ்நாத்சிங் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்குதான் இப்போது சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தலையங்கம் மூலம் பதில் அளித்திருக்கிறது.

உயிரிழப்பு உண்மைதான்
அதில், லடாக் மோதலில் சீனா வீரர்கள் உயிரிழந்தது உண்மைதான். ஆனால் சீனா வீரர்களின் மரண எண்ணிக்கை இந்தியா சொல்வதைப் போல இல்லை. அதைவிட குறைவுதான் என முதல் முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது.

சரண் அடையவில்லை
அத்துடன், இந்திய ராணுவ வீரர்கள் மலைகளில் இருந்து உருண்டும் ஆறுகளில் விழுந்தும் உயிரிழந்தனர். இந்திய வீரர்கள், சீனாவிடம் சரணடைந்தனர்; ஆனால் இந்திய ராணுவத்திடம் சீன வீரர்கள் ஒருவர்கூட சரணடையவில்லை என்றும் அந்த தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications