இந்தியாதான் முதலில் எல்லை தாண்டியது.. அவர்கள்தான் தாக்கியது.. சீனாவின் முரணான கருத்து.. பின்னணி!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள்தான் அத்துமீறி புகுந்து இருக்கிறார்கள்., இந்தியாதான் எல்லையில் முதலில் தாக்குதல் நடத்தியது என்று சீனாவின் வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Recommended Video

    3 INDIAN SOLDIERS இறப்பு...CHINA BORDERல் தாண்டவம்

    இந்தியா - சீனா ராணுவம் இடையே லடாக் எல்லையில் நேற்று இரவு நடந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேரும் ஒரு ராணுவ அதிகாரியும் வீர மரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இந்த சண்டை நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளது.

    அறிக்கையே

    அறிக்கையே

    இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக தற்போது சீனாவின் வெளியுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், திங்கள் கிழமை இரவு இந்த சண்டை நடந்தது. சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள்தான் அத்துமீறி புகுந்து இருக்கிறார்கள். முறையின்றி இந்தியாதான் எல்லையை மீறி உள்ளே வந்தது. சீன வீரர்களை தூண்டிவிடும் விதமாக இந்தியாதான் அங்கு அத்துமீறியது.

    யார் தாக்குதல்

    யார் தாக்குதல்

    அதோடு இந்திய வீரர்கள் சீன வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனால் இரண்டு நாட்டு வீரர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்திய தரப்புக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை எல்லை மீற கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சூழ்நிலையையே மோசமாக்கும் விதமாக எதுவும் செய்ய கூடாது என்று இந்திய தரப்பிற்கு தெரிவிக்கிறோம்.

    தீர்வு

    தீர்வு

    இந்த சண்டையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயன்று கொண்டு இருக்கிறோம். அமைதியை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும். எல்லையில்பேச்சுவார்த்தைகளை நடத்தி அமைதியை கொண்டு வரலாம். அதற்கு சீனா தயாராக இருக்கிறது. இந்தியாவும் பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும், என்று சீனாவின் வெளியுறவுத்துறை அறிக்கையே வெளியிட்டுள்ளது.

    என்ன முரண்

    என்ன முரண்

    கல்வான் பகுதி என்பது இந்தியாவிற்கு கீழ் வரும் பகுதி ஆகும். முழுக்க முழுக்க இந்தியாவிற்கு சொந்தமான பகுதி ஆகும் இது . இங்கு இந்தியா எல்லை மீறியதாக கூறுவதே ஏற்க கூடியதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ராணுவ தரப்பும் தகவல்களும் இதற்கு எதிராகவே இருக்கிறது. சீனாதான் எல்லையில் மீறியது. அங்கு சீனாதான் முதலில் தாக்குதல் நடத்தியது என்று இந்திய தரப்பு கூறியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+