ஏர் ஏசியா விதிமீறல் தான் விபத்திற்கு காரணமா?: கசிந்த முக்கிய ஆவணம்
ஜகர்தா: ஏர்ஏசியா விமானம் க்யூஇசட் 8501 டேக் ஆப் ஆகும் முன்பு விமானிகளுக்கு வானிலை அறிக்கை அளிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 28ம் தேதி 162 பேருடன் இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் கிளம்பிய ஏர் ஏசியா விமானம் க்யூஇசட் 8501 விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்து மூழ்கியது. ஜாவா கடலில் இருந்து இதுவரை 31 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தோனேசிய அதிகாரி ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனுப்பிய ஆவண தகவல் கசிந்துள்ளது.

வானிலை அறிக்கை
ஏர்ஏசியா விமானம் கிளம்பும் முன்பு விமானிகளுக்கு வானிலை அறிக்கை அளிக்கப்படவில்லை. ஏர் ஏசியாவுக்கு காலை 7 மணிக்கு தான் வானிலை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானம் அதிகாலை 5.33 மணிக்கு எல்லாம் கிளம்பிவிட்டது.

ஆவணங்கள்
வானிலை அறிக்கை குறித்த தகவல் இந்தோனேசியா வானிலை மைய அதிகாரி அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் இக்னேஷியஸ் ஜோனானுக்கு அனுப்பிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆவண தகவல் கசிந்து தான் தற்போது உண்மை தெரிய வந்துள்ளது.

விதிமீறல்
ஏர்ஏசியா இந்தோனேசியா பிரிவின் விதிமீறலால் தான் விமானம் விபத்துக்குள்ளானது என்று இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அது எப்படி
ஒவ்வொரு முறையும் விமானத்தை டேக் ஆப் செய்ய 10 நிமிடங்களுக்கு முன்பு வானிலை அறிக்கையை விமானி நிச்சயம் பெற வேண்டும். அப்படி இருக்கையில் ஏர்ஏசியா விமானி வானிலை அறிக்கையை பெறாமலேயே எப்படி விமானத்தை எடுத்தார் என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மறுப்பு
வானிலை அறிக்கை பெறாமல் விமானத்தை எடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ஏர்ஏசியா இந்தோனேசிய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications