பார்வையாளர்கள் முன்னிலையில் சகோதரியைக் கடித்துக் கொன்ற ஆண் சிங்கம்
டல்லாஸ்: டல்லாஸ் மிருகக் காட்சிச் சாலையில் பார்வையாளர்கள் முன்னிலையில் ஆண் சிங்கம் ஒன்று தனது சகோதரியான பெண் சிங்கத்தை கடித்துக் கொன்ற கோடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பொதுவாக விலங்குகளுக்கு இடையே செல்லச் சண்டைகளும், குறும்புகளும் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று தான். அதனைப் பார்வையிடுவதற்காகத் தான் பார்வையாளர்கள் குடும்பம் சகிதமாக மிருகக்காட்சிச் சாலைக்குச் செல்வார்கள்.
ஆனால், விலங்குகளின் விளையாட்டு விபரீதமாகிப் போனால், பார்வையாளர்கள் அரண்டு தானேப் போவார்கள். அப்படித்தான், டல்லாஸ் மிருகக் காட்சி சாலையில் சிங்கங்களின் சண்டையில் பெண் சிங்கமொன்று பரிதாபமாகப் பலியாகியுள்ளது.

சண்டை....
டல்லாஸில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் ஒரே வயிற்றில் பிறந்த மூன்று ஆண் சிங்கங்கள் மற்றும் இரண்டு ஆண் சிங்கங்கள் ஒரீடத்தில் அடைக்கப் பட்டுள்ளன. ஞாயிறன்று விடுமுறை தினமாதலால் டல்லாஸ் மிருகக்காட்சி சாலையில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அப்போது, சிங்கங்கள் அடைக்கப் பட்டிருந்த பகுதியில் திடீரென மக்கள் அலறும் சத்தம் கேட்டு வனத்துறை ஊழியர்கள் ஓடி வந்துள்ளனர்.

விபரீதம்...
அங்கே, இரண்டு சிங்கங்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளன. முதலில் இறைச்சிக்காக விளையாட்டாக சிங்கங்கள் மோதிக் கொள்கின்றன என நினைத்த ஊழியர்களுக்கு பின்னர் தான் நடக்கும் விபரீதம் புரிந்துள்ளது.

சிகிச்சை....
ஆண் சிங்கம் தனது ஐந்து வயது சகோதரியான பெண் சிங்கத்தை கழுத்தை கடித்துக் குதறுவதைக் கண்டு திடுக்கிட்ட ஊழியர்கள், விரைந்து பெண் சிங்கத்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மரணம்....
ஆனால், அங்கு அதனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அது கழுத்தில் கடிபட்டு உயிரிழந்ததை உறுதி செய்தனர். பலியான பெண் சிங்கத்தின் பெயர் ஜோஹாரி.

சிங்கத்தின் கோபம்...
இது குறித்து அந்த மிருகக்காட்சி சாலையின் நிர்வாகி கிராமர் கூறுகையில், இரண்டு சகோதர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் என அங்கு ஐந்து சிங்கங்கள் இருந்தன. சிங்கங்கள் கோபமானவை தான். ஆனால், அவை ஒன்றையொன்று தாக்கிக் கொல்லும் அளவிற்கு மோசமானவை அல்ல' எனத் தெரிவித்துள்ளார்.

செல்லப்பிள்ளை....
ஊழியர்களால் செல்லமாக ஜோஜோ எனச் செல்லமாக அழைக்கப் படும் ஜோஹாரி, பழகுவதற்கு இனிமையானதாம். ஜோஹாரியின் மறைவினைத் தொடர்ந்து அனைத்து சிங்கங்களும் தனித் தனி கூண்டில் அடைக்கப் பட்டுள்ளது.

அதிர்ச்சி...
மிருகக்காட்சி சாலைக்கு வந்திருந்த பார்வையாளர்கள் முன் அரங்கேறிய இந்தக் கொடூரத்தால், அங்கு வந்திருந்த மக்கள், குழந்தைகள் ஆகியோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications