பாகிஸ்தானில் இந்து கோவில், சிலைகள் சேதம்! டூவீலர்களில் வந்த மர்மநபர்கள் வெறிச்செயல்! பதற்றம்
கராச்சி: பாகிஸ்தான் கராச்சி அருகே கோரங்கி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரி மாதா கோவிலில் தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் தெய்வ சிலைகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவும் நிலையில் இந்து மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் இந்துக்கள் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது இஷ்ட தெய்வங்களுக்கு கோவில் கட்டி வணங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வப்போது இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், தெய்வ சிலைகள் சேதப்படுத்துவதையும் மர்மநபர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

பாகிஸ்தானில் இந்துக்கள்
பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ கணக்கீட்டின்படி மொத்தம் 75 லட்சம் இந்துக்கள் வசிக்கின்றனர். இருப்பினும் அங்கு வசிக்கும் இந்துக்களின் எண்ணிக்கை 90 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான இந்து மக்கள் சிந்து மகாணத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

கராச்சி கோவில், சிலைகள் சேதம்
அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் கராச்சியில் உள்ள கோரங்கி பகுதியில் உள்ள ஸ்ரீமாரிமாதா கோவிலில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு வந்த மர்மநபர்கள் தெய்வங்களின் சிலைகளை அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் சிலை சேதப்படுத்தப்பட்டதை மறைக்கும் வகையில் துணிகள் கட்டப்பட்டது.

6 முதல் 8 நபர்கள்
இந்த சம்பவம் குறித்து அங்கு வசிக்கும் சஞ்சீவ் கூறுகையில், ‛‛6 முதல் 8 நபர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்து கோவிலில் நுழைந்து சிலைகளை தாக்கி உடைத்தனர். அவர்கள் யார்? எதற்காக தாக்கினர்? என்பது தெரியவில்லை. வந்த வேகத்தில் கோவிலை சேதப்படுத்திவிட்டு சென்றுவிட்டனர். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளோம்'' என்றார்.

அச்சத்தில் மக்கள்
சமீபகாலமாக பாகிஸ்தானில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தான் கோரங்கி பகுதியில் உள்ள கோவிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றத்தால் அங்கு வசிக்கும் இந்து மக்கள் அச்சமடைந்துள்ளதாக தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கோட்ரியில் சிந்து நதிக்கரையில் அமைந்துள்ள பழமையான வரலாற்று சிறப்பு மிக்க கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருவண்ணாமலையில் கோவில் கொடிமரம் அருகே வந்த விஐபிக்கள்.. ஆந்திர குடும்பத்தினருக்கு என்ன நடந்தது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications