தூங்குவதற்கு இடைஞ்சலாக உள்ள காரை நகர்த்த கூறிய முதியவரை துப்பாக்கியால் சுட்ட பெண்
சாலையோரத்தில் தூங்கும் முதியவர் ஒருவர் அங்கிருந்த காரை நகர்த்த கூறியதால் ஆத்திரமடைந்த பெண் அவரை துப்பாக்கியால் சுட்டார்.
வாஷிங்டன்: சாலையோரத்தில் தூங்கும் முதியவர் ஒருவர் தனக்கு இடைஞ்சலாக உள்ளதாக அங்கிருந்த காரை சற்று நகர்த்துமாறு கூறியதால் ஆத்திரமடைந்த பெண், அந்த முதியவரை துப்பாக்கியால் சுட்டார்.
அமெரிக்காவின் நாஷ்வில்லேவை சேர்ந்தவர் ஜெரால்டு மெல்டன் (54). இவருக்கு வீடு இல்லாததால் சாலையோரத்தில் படுத்து உறங்குவது வழக்கம்.
மியூசிக் ரோ பகுதியில் உள்ள 19-ஆவது அவென்யூவில் அந்த முதியவர் உறங்கி கொண்டிருந்தார். அப்போது கடந்த மாதம் 26-ஆம் தேதி அவ்வழியாக வந்த எஸ்யூவி போர்ஷே கார் முதியவர் படுத்திருந்த இடத்துக்கு நேராக அதிகாலை வந்து நின்றது.

அசந்து தூக்கம்
அதிகாலை நேரம் என்பதால் சாலையில் படுத்திருந்தவர்களும், மெல்டனும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்திருந்த காரின் எஞ்சின் சப்தமும், காரில் ஓடி கொண்டிருந்த பாட்டு சப்தமும் காதை பிளந்ததாக இருந்தது.

தூக்கம் கலைந்தது
இதனால் அங்கு படுத்திருந்தவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த முதியவர் அந்த காரில் இருந்த பெண்ணிடம் சென்று காரை சற்று தள்ளி நிறுத்துமாறு கூறினார்.

ஆத்திரம் அடைந்த பெண்
இதனால் அந்த காரில் இருந்த கேத்தி க்வாகென்புஷ் என்ற பெண்ணுக்கும், முதியவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதைத் தொடர்ந்து அந்த முதியவர் அந்த பெண்ணுடன் வாதாட முடியாமல் தனது உறங்குமிடம் நோக்கி சென்றார்.

துப்பாக்கி சூடு
அப்போது காரில் இருந்த துப்பாக்கியால் அந்த முதியவரை அந்த பெண் சுட்டார். இதனால் அவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது. பின்னர் அந்த பெண் காரில் ஏறி அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை போலீஸார் தேடி வந்தனர்.

பெண் கைது
இந்நிலையில் அந்த பெண்ணை கடந்த திங்கள்கிழமை அன்று போலீஸார் கைது செய்தனர். அவருக்கு 25,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications