3வது முறையாக "கொல்லப்பட்ட" பாகிஸ்தான் தலிபான் தலைவர் பஸ்லுல்லா!
லாகூர்: ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் பெஷாவர் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக இருந்த தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பின் தலைவர் முல்லா பஸ்லுல்லா பலியாகிவிட்டதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் இறந்துவிட்டதாக 3வது முறையாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவல் வதந்தியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் புகுந்த தெஹ்ரிக் இ தாலிபான் தீவிரவாதிகள் 6 பேர் கண்மூடித்தனமாக சுட்டதில் 132 குழந்தைகள் உள்பட 148 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு முக்கிய மூளையாக இருந்தது தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பின் தலைவர் முல்லா பஸ்லுல்லா(40). அவரை ரேடியோ முல்லா என்றும் அழைப்பார்கள்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் பஸ்லுல்லா இறந்துவிட்டதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூன்றாவது முறை
பஸ்லுல்லா இறந்தவிட்டதாக இத்துடன் மூன்றாவது முறையாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு முறையும் அவர் இறப்பு குறித்த செய்தி வருவதும் அது உண்மை இல்லை என்று பின்னர் தெளிவுபடுத்தப்படுவதும் வழக்கமாகிவிட்டது.

தீவிரவாதிகள்
பஸ்லுல்லா இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இது குறித்து தெஹ்ரிக் இ தாலிபான் தீவிரவாதிகளும் எதுவும் தெரிவிக்கவில்லை.

இல்லை
ஆளில்லா விமான தாக்குதலில் தாலிபான் கமாண்டர் காரி இதாயத்துல்லா பலியாகிவிட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளதாக பஜ்வோக் ஆப்கான் செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது. ஆனால் பஸ்லுல்லா பற்றி எதுவும் தெரியவில்லை.

2010
2010ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் நூரிஸ்தான் மாகாணத்தில் பஸ்லுல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் பலியாகிவிட்டதாக முதலில் செய்தி வெளியானது. அந்த செய்தியை ஆப்கானிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு படை தலைவர் முகமது ஜமான் மாமோசாய் உறுதியும் செய்தார். ஆனால் பஸ்லுல்லா இறக்கவில்லை.

2014
கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் பஸ்லுல்லா இறந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது.

பஸ்லுல்லா
பஸ்லுல்லா மரணம் குறித்து தாலிபான்களே வேண்டும் என்றே பொய் செய்தியை பரப்பலாம் என்று கூறப்படுகிறது. அமைப்பினரை ஒன்றாக்கி வலுப்படுத்தியதில் பஸ்லுல்லாவுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனால் தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்புக்கு பஸ்லுல்லா மிகவும் முக்கியமானவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications