லோக்சபா தேர்தல் முடியட்டும்.. இந்தியாவுடனான உறவு மேம்படும்.. இம்ரான்கான் நம்பிக்கை
இஸ்லாமாபாத்: லோக்சபா தேர்தல் முடியட்டும். இந்தியாவுடனான உறவு மேம்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகிவிட்டனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இம்ரான்கான் பெய்ஜிங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் ஆப்கானிஸ்தானில் என்ன நடைபெற்றாலும் அது பாகிஸ்தான் எல்லை பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வலுப்படுத்த முயற்சி
அந்நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படும். இதனால் அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஈரானுடன் பாகிஸ்தானுக்கு நல்ல உறவு உள்ளது. அதை வலுப்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.

உறவு மேம்படும்
இந்தியாவுடனான உறவு மட்டும்தான், பாகிஸ்தானுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை ஆகும். எனினும் இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தல்களுக்குப் பிறகு அந்த நாட்டுடனான உறவு மேம்படும் என நாங்கள் நம்புகிறேம்.

முக்கிய பங்கு
சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தால் இதில் பங்கேற்றுள்ள நாடுகளிடையே சிறப்பான தொடர்புகள் ஏற்படும். பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் மற்றும் சீனாவின் சின்சியாங் பிராந்தியம் இடையே தகவல் தொடர்பு அதிகரிக்க இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

பரபரப்பு
மோடி மீண்டும் பிரதமராக வந்தால் காஷ்மீர் பிரச்சினைகள் குறித்து பேசி தீர்க்கப்படும் என இம்ரான் கான் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications