அமெரிக்க தமிழ் பள்ளியில் அசத்தும் தமிழ்ப்பாடல்!
அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் சார்பில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்ப் பள்ளியில் வெளியிடப்பட்டுள்ள பாடல் பலரின் வரவேற்பு பெற்றுள்ளது.
சிக்காகோ: ப்ளுமிங்டன் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளியில் தமிழ்பாடல் ஒன்று பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் பரவி வரும் இந்த பாடல் பலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் சிக்காகோவிற்கு அருகில் உள்ள ப்ளூமிங்டன் எனும் ஊரில் அப்துல் கலாம் அவர்களின் பெயரில் தமிழ் பள்ளி இயங்கி வருகிறது. இதில் அங்குள்ள தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் மொழியும் கலாச்சாரமும் கற்றுத் தரப்படுகிறது.
இந்நிலையில் அப்பள்ளியில் பணிபுரியும் அய்யனார் என்பவர் பள்ளிக்காக ஒரு பாடலை எழுதியுள்ளார். அதற்கு தயா சைரஸ் அவர்கள் குழு இசை அமைத்துள்ளது.
அந்த பாடல் வீடியோக் காட்சியாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை அப்பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழாவிலே வெளியிடப்பட்டது. பள்ளியின் முதல்வர் உமா கைலாசம் , துணை முதல்வர் ரத்னாகுமார் , வினோத் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்த் தலைவர்கள், தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டையும் போற்றும் வகையில் அந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வளைய வரும் அந்தப் பாடல் உங்கள் பார்வைக்காக..