மாலத்தீவில் உச்சக்கட்ட அரசியல் நெருக்கடி.. ஐநா தலையிட இந்தியா வலியுறுத்தல்
மாலத்தீவில் நிலவும் உச்சக்கட்ட அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண ஐநா தலையிட வேண்டும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மாலே: மாலத்தீவில் நிலவும் உச்சக்கட்ட அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண ஐநா தலையிட வேண்டும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நசீத் உட்பட 9 பேரை விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 1ஆம் தேதி உத்தரவிட்டது. அதனை அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்க மறுத்துவிட்டார்.

மேலும் கடந்த திங்கள் கிழமை முதல் 15 நாட்களுக்கு அவசர நிலையையும் அதிபர் அறிவித்தார். அவசரநிலையை பிரகடனப்படுத்திய சில மணி நேரங்களில் முன்னாள் அதிபர் அப்துல் கயூம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல் சயீது மற்றும் நீதிபதி அலி ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் மாலத்தீவில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் மாலத்தீவில் இந்திய செய்தியாளர்கள் 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அதிபர் அப்துல்லா தனது தூதர்களை பாகிஸ்தான், சவுதி, சீனா ஆகிய நாடுகளுக்கு அனுப்பினார். ஆனால் மாலத்தீவு உள்விவகாரங்களில் தலையிட சீனா மறுத்துவிட்டது.
அதே நேரத்தில் மாலத்தீவு நெருக்கடிக்கு தீர்வு காண சீனா தனது முயற்சியை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் மாலத்தீவில் சகஜ நிலை ஏற்பட ஐ.நா. சார்பில் மேற்பார்வையாளரை அனுப்பி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications