For Daily Alerts
Just In
லிட்டில் இந்தியா கலவரம்: இந்தியருக்கு 18 வாரம் சிறை
சிங்கப்பூர்: சிங்கப்பூர் லிட்டில் இந்தியா கலவரம் தொடர்பாக, இந்தியர் ஒருவருக்கு 18 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 8-ம் தேதி லிட்டில் இந்தியாவில் கலவரம் நடைபெற்ற பகுதியில் கிருஷ்ணன் சரவணன் என்ற அந்த இளைஞர் இருந்ததாகவும், பலமுறை காவல் துறை அறிவுறுத்தியும் அவர் அங்கிருந்து செல்லாததால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கலவரத்தில் ஈடுபட்டதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமானதால் கிருஷ்ணன் சரவணனுக்கு 18 வாரம் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் தண்டனை பெறும் 6-வது நபர் இவர் என்பது குறிப்பித்தக்கது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
English summary
A 31-year-old Indian national was jailed on Tuesday for 18 weeks in Singapore for his role in the country's worst riot in 40 years, the sixth person to be sentenced in connection with the incident.
Story first published: Tuesday, April 1, 2014, 14:36 [IST]