அமெரிக்காவில் புதிய தொழில்முனைவோர் களத்தில் உயரும் இந்தியர்களின் கை
அமெரிக்காவில் புதிய தொழில்முனைவோராக இந்திய வம்சாவளியினர் அதிகரித்து வருகின்றனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய தொழில்முனைவோர்களாக இந்தியர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் பல சுந்தர் பிச்சைகள் உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைகளை எல்லாம் இந்தியர்கள் பிடுங்கிக் கொள்கின்றனர் என்ற விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக ஐடி துறையில் இந்தியர்களின் பங்கு குறித்து இப்போதுள்ள அதிபர் டிரம்ப் அதிகமாகவே விமர்சித்தார்.
ஆனால், அதனை எல்லாம் தாண்டி தற்போது இந்திய வம்சாவளியினர் தொழில் முனைவோர்களாகவும் அமெரிக்காவில் வளர்ந்து வருகின்றனர்.

முதல் தலைமுறை தொழில் முனைவோர்
அமெரிக்காவில் 1980களில் இந்தியர்கள் தொழில் தொடங்கத் தொடங்கினர். அவர்கள்தான் அமெரிக்காவில் தொழில் தொடங்கிய முதல் தலைமுறையினர். அவர்களில் கன்வால் ரேக்கி, வினோத் கோசலா, நரேன் குப்தா, பிரபு கோயல், சுகாஸ் பாட்டீல் மிகவும் முக்கியமானவர்கள்.

அமெரிக்க நுகர்வோர் சந்தை
முதன் முதலில் நிறுவனங்களை தொடங்கிய இந்தியர்கள் அமெரிக்காவின் நுகர்வு சந்தை நிலவரம் குறித்த அச்சத்தில் இருந்தனர். அதனால் நுகர்வோருக்குத் தொடர்பில்லாத என்ஜீனியரிங் உள்ளிட்ட நிறுவனங்களைத் தொடங்கினர்.

இந்தியர் தொடங்கிய ஹாட்மெயில்
இதனைத் தொடர்ந்து நுகர்வு சந்தையை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களைத் தொடங்க இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்குச் சிறந்த உதாரணமாக இந்தியாவைச் சேர்ந்த சபீர் பாட்டியா 1996ல் உருவாக்கிய ஹாட்மெயில்.காம் நிறுவனத்தைக் கூறலாம்.

அமெரிக்க நிறுவனங்களில் இந்திய தலைமை
காலப்போக்கில் பல நிறுவனங்கள் இந்தியர்களைத் தலைமை பொறுப்பில் கொண்டு இயங்கத் தொடங்கின. ஐஐடி மாணவராக தீரஜ் பாண்டே, ஜோதி பன்சால், மணிஷ் சந்திரா ஆகியோர் முக்கிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தினார்கள்.

8 சதவீத தொழில்கள்
அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவாக வாழும் இந்தியர்கள் 8 சதவீத அளவிற்குத் தொழில்களை தொடங்கி வைத்துள்ளனர். கடந்த கடைசி 5 ஆண்டுகளில், சாப்ட்வேர் மற்றும் சேவை துறைகளில் இந்தியர்கள் தொடங்கிய நிறுவனங்கள்தான் முதல் 17 இடங்களில் உள்ளன. இந்தியர்களின் அபிஜி, ஆஸ்பெக்ஸ், வேபேர் உள்ளிட்ட 34 நிறுவனங்களில் 29 சதவீதம் பங்கு சந்தையில் இடம் பெற்றுள்ளது.

இந்தியர்களின் பங்கு
அமெரிக்காவில், ஒரு பில்லியன் மதிப்பைக் கொண்ட தனியார் நிறுவனங்கள் 261 இயங்குகின்றன. இதில் 14 நிறுவனங்கள் இந்திய வம்சாவளியினர் தலைமையில் உருவானது. இந்த 14 நிறுவனங்களும் 35.17 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டது. இந்த நிறுவனங்களில் இருந்து 81.8 பில்லியன் டாலர் ஐடி துறைக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் போருக்கும்.. LPG சிலிண்டருக்கும் என்ன தொடர்பு? எப்படி தட்டுப்பாடு வந்தது? சிக்கலின் ஆதி புள்ளி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
உலகையே திரும்பி பார்க்க வைத்த.. 'மிஸ்டரி' போன் கால்.. புடினிடம் போனை போட்ட கெஞ்சிய டிரம்ப்? -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு.. சென்னையில் நிலைமை எப்படி இருக்கு? ஹோட்டல்கள் மூடப்படுமா? பின்னணி -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு டீசர்தான்.. மெயின் பிரச்சனையே இனிதான்.. கவனமா இருங்க.. வரப்போகும் சிக்கல் -
ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா! அலறும் இஸ்ரேல்! ட்ரம்புக்கு வந்த அவசர போன்! மிடில் ஈஸ்ட் ‘திக் திக்’ -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications