ஆப்கான் எல்லையில் தாலிபான்கள்- ஈரான் ராணுவம் இடையே திடீர் மோதலால் பதற்றம்!
காபூல்: ஈரான் ராணுவத்தினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டதால் ஆப்கான்-ஈரான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறியதை தொடர்ந்து தாலிபான்கள் கை ஓங்கியது. ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அப்போது ஈரான் உடனடியாக தாலிபான்களை அங்கீகரிக்கவில்லை.
தாலிபான்கள் கடந்த காலங்களைப் போல இல்லாமல் இம்முறை சர்வதேச நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வருகின்றனர். இதனால் இந்தியா, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, உள்ளிட்ட பல நாடுகளுடன் தாலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தாலிபான்கள்-ஈரான் உறவு
கடந்த அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஈரான் ஆலோசனை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது. டெஹ்ரானில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்றன. ஆனால் தாலிபான்களுக்கு ஈரான் அழைப்பு விடுவிக்கவில்லை. இருப்பினும் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கான சிறப்புத் தூதர் ஹாசன் கசேமி குயோமி தலைமையிலான ஈரான் தூதுக் குழு ஆப்கானிஸ்தான் சென்றது. அங்கு தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது.

தாலிபான்கள் தாக்குதல்
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லையில் ஈரான் விவசாயிகள் எல்லை தாண்டி நுழைவதாக நினைத்து தாலிபான்கள் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். தங்களது நாட்டு விவசாயிகள் மீது தாலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஈரான் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதனையடுத்து ஈரான் ராணுவத்தினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

ஈரான் பதிலடி
தாலிபான்களுக்கு பதிலடியாக ஈரான் ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தினர். ஈரான் செய்தி நிறுவனங்களில் ஒன்றான டாஸ்னிம்(Tasnim), ஈரானின் ஹிர்மாத் கவுண்ட்டி பகுதியில் உள்ள Shaghalak கிராமத்தில் இந்த மோதல் நிகழ்ந்ததை உறுதி செய்திருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டன.

ஈரான் விளக்கம்
இதனைத் தொடர்ந்து தவறான புரிதலால் இந்த மோதல் நிகழ்ந்ததாக தாலிபான்களும் ஈரான் ராணுவ தரப்பும் விளக்கம் அளித்திருக்கின்றன. இந்த மோதல் குறித்து ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சயீத் கதீப்ஜடே கூறுகையில், எல்லை பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே ஏற்பட்ட தவறான புரிதலால் இந்த மோதல் நிகழ்ந்தது என்று பொதுவாக குறிப்பிட்டிருக்கிறார். இந்த அறிக்கையில் தாலிபான்கள் பெயர் குறிப்பிடப்படவில்லை.
-
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications