"ஷாக்கிங்"... பலாத்காரத்தின்போது பெண் சத்தம் போடவில்லை என்பதால் குற்றவாளிக்கு விடுதலை!
இத்தாலியில் பாலியல் பலாத்காரத்தின் போது பெண் சத்தம் போடவில்லை என்பதை காரணமாக வைத்து குற்றவாளியை நீதிபதி விடுதலை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி: இத்தாலியில் பாலியல் பலாத்காரத்தின் போது பெண் சத்தம் போடாததால் குற்றவாளியை நீதிபதி ஒருவர் விடுதலை செய்துள்ளார். அந்தப் பெண் பலாத்காரத்தின் போது, "நிறுத்துங்கள், போதும் என்றுதான் கூறியுள்ளார். யாரையும் உதவிக்கு அழைக்கவும் இல்லை கத்தவும் இல்லை" என நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
இத்தாலியின் ஏஎன்எஸ்ஏ செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி ரெட் கிராஸில் பணிபுரியும் ஒரு பெண்ணை அவரது உயர் அதிகாரியான 46 வயது நபர் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதில் தனது உயர் அதிகாரி தன்னை அடிக்கடி தனது பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும் அவரது ஆசைக்கு இணங்காவிட்டால் வேலை வழங்கப்படாது என மிரட்டியதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

பெண் ஏன் கத்தவில்லை?
இந்த வழக்கு வடக்கு இத்தாலியின் டூரின் நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அந்த நபர் பலாத்காரத்தின்போது பாதிக்கப்பட்ட பெண் ஏன் கத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.

முடியாது என்பதே போதுமானது
ஆனால் இதற்கு பதில் அளித்த அந்த பெண், ஒருவர் உடலுறவுக்கு அழைக்கும் போது முடியாது என கூறும் வார்த்தையே போதுமானது. மேலும் என்னை பலாத்காரம் செய்தவர் என்னை விட பலசாலி என்பதால் அவரை என்னால் தடுக்க முடியவில்லை என்றார்.

குற்றவாளியை விடுவித்த நீதிபதி
ஆனால் இதனை ஏற்காத நீதிபதி, பலாத்காரத்தின்போது, குற்றவாளியிடம் 'வேண்டாம்' என பெண் கூறுவது போதுமான ஆதாரமாக இல்லை என்றார். மேலும் பலாத்காரத்தின் போது நிறுத்துங்கள், வேண்டாம் என்றுதான் அந்த பெண் கூறியுள்ளாரே தவிர, கத்தி கூச்சலிடவில்லை யாரையும் உதவிக்கும் அழைக்கவில்லை என்றும் விளக்கமளித்த நீதிபதி குற்றவாளியை விடுதலை செய்துள்ளார்.

சட்ட வல்லுநர்கள் எதிர்ப்பு
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரும் குற்றவாளியின் பெயரும் வெளியிடப்படவில்லை. நீதிபதியின் இந்த தீர்ப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண் கூச்சலிடுவதை வைத்து அவள் படும் துன்பத்தை அளவிட முடியாது என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விசாரணைக்கு உத்தரவு
இந்த தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பெண் சத்தம் போடாததால் தான் குற்றவாளி விடுவிக்கப்பட்டாரா என விசாரணை நடத்த அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications