ஜப்பானின் புகுஷிமா அருகே 7.3 ரிக்டர் அளவில் பெரும் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பானின் புகுஷிமா பகுதி அருகே 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

கிட்டத்தட்ட 20 லட்சம் வீடுகளில் மின்சார தடை இதனால் ஏற்பட்டுள்ளது. 2011ல் இதே புகுஷிமா கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது அங்கு பெரிய சுனாமி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் நிலநடுக்கம்

மீண்டும் நிலநடுக்கம்

இது வடக்கு ஜப்பான் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 2011 மார்ச் 11ம் தேதி அங்கு இந்த பேரழிவு ஏற்பட்டது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது. அதை தொடர்ந்து அங்கு சுனாமி ஏற்பட்டது. இப்போது 11 வருடங்கள் கழித்து மீண்டும் மார்ச் மாதத்தில் அதே புகுஷிமா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 சுனாமி

சுனாமி

ஜப்பானில் பதிவான மிக வலிமையான நிலநடுக்கம் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் புகுஷிமாவில் சுனாமி அலைகள் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது .. இதன் காரணமாக 40.5 மீட்டர் உயரம் வரை அங்கு அலைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. வடக்கு Honshu பகுதிதான் இந்த சுனாமி காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி ஆகும். தற்போது இதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை

சுனாமி எச்சரிக்கை

2011ல் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக புகுஷிமாவில் உள்ள அணு உலையில் கசிவு ஏற்பட்டது. அங்கு சுனாமி காரணமாக ஏற்பட்ட அலை அணு உலை ரியாக்டர் 1-4 வரை சென்றது. இதனால் அணு உலைக்கு தண்ணீர் அனுப்பும் மோட்டார்கள் சேதம் அடைந்து செயல் இழந்தது. இதன் காரணமாக அணு உலை கூலண்ட் வேலை செய்யாமல் போய், அது அணு கசிவு ஏற்பட காரணமாக அமைந்தது. அந்த அணு உலை மீது அப்போது 14 மீட்டர் உயர சுனாமி அலை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

அணு உலை

அணு உலை

இதனால் அங்கு மூன்று ரியாக்டர்களில் மொத்தமாக கசிவு ஏற்பட்டது. அதோடு மூன்று ஹைட்ரஜன் வெடிப்புகளும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 20 கிமீ சுற்றுவட்டாரத்தில் இருந்த 154,000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் பல லட்சம் லிட்டர் அணு ஆயுத கசிவு ஏற்பட்ட தண்ணீர் பசிபிக் கடலில் கலந்ததும் குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் ஏற்பட்ட 2011 சுனாமி காரணமாக 19,747 பேர் பலி, 6,242 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அணு உலை கசிவால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2,202 பேர் இங்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+