திடீர் பயணம்... ஈராக்கின் குர்திஷ் பகுதிக்குச் சென்றார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி
அர்பில்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி தனது பாக்தாத் பயணத்தைத் தொடர்ந்து குர்திஷ் மக்களின் சுயாட்சிப் பகுதிக்கு சென்றார்.
ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே உருவான மதக்கலவரம் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா அரசுக்கு எதிராக சதாம் ஆதரவுப் படையான சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஈராக் சிதறுண்டு போய்க் கொண்டுள்ள நிலையில் அதைத் தடுத்து அமைதியை ஏற்படுத்தும் வகையில் ஜோர்டானில் இருந்து ஈராக்குக்கு சென்றுள்ளார் அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி. அங்கு அவர் ஈராக் அரசு தலைவர்களுடன் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆலோசித்தார்.

பாக்தாத்தில் ஈராக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர் குர்திஷ் பகுதிக்கு வந்தார் கெர்ரி. சன்னி போராளிகளைக் கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கெர்ரியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த்தாக கருதப்படுகிறது.
மேலும், குர்திஷ் பகுதியை தனி நாடாக பிரகடனம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி வருவதால் கெர்ரியின் குர்திஷ் பகுதி பயணம் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அர்பில் நகருக்கு வருகை தந்த கெர்ரி, குர்திஷ்தான் அதிபர் மஸ்த் பர்ஸானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஈராக்குடன் இணைந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவருக்கு கெர்ரி எடுத்துரைத்தார்.
அனைத்து ஈராக் மக்களுக்கும் நலம் பயக்கும் வகையில் குர்திஷ்தான் பிராந்தியம் செயல்பட வேண்டும் என்றும் ஈராக் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒரு காலத்தில் சதாம் உசேனால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளானவர்கள், ஈராக்கிய குர்திஷ் இனத்தவர் என்பது நினைவிருக்கலாம். தற்போதைய ஐஎஸ்ஐஎஸ் தாக்குதலின் பின்னணியில் அவர்கள் தனி நாடாக பிரிந்து போக ஆயத்தமாகி வருகிறார்கள். ஆனால் இதை ஈராக் விரும்பவில்லை, எதிர்த்து வருகிறது.
அதேசமயம், ஈராக் பிரதமர் பதவியிலிருந்து நூரி அல் மாலிக்கி விலக வேண்டும் என்று பர்ஸானி வலியுறுத்தியுள்ளார். காலம் மாறி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக எங்களால் முடிந்ததைச் செய்து விட்டோம். ஈராக்கை ஜனநாயக நாடாக கட்டியமைக்க முயற்சித்தோம். ஆனால் அது தோல்வி அடைந்து விட்டது. தற்போது குர்திஷ்தான் மக்கள் தங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளனர். மக்களின் விருப்பத்திற்கேற்ற முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications