குல்பூஷண் ஜாதவை தூக்கில் போட மாட்டோம்... உறுதியளித்த பாகிஸ்தான்
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை தூக்கில் போடமாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்: கருணை மனு உரிமையை இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் நிறைவேற்றிக்கொள்ளும் வரையில், அவரைத் தூக்கில் போட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி, இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு , மரண தண்டனை விதித்து, அந்த நாட்டின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஏப்ரல் மாதம் 10ம் தேதி வழங்கப்பட்ட இந்த தீர்ப்புக்கு எதிராக இந்தியா, திஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. அதை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவ் மீதான மரண தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில், தான் இறுதி முடிவு எடுக்கும் வரையில், ஜாதவ் மீதான மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது எனவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக அவரின் தாயார், மேல் முறையீடு செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஜாதவுக்கு எதிராக தீர்ப்பு அமையுமானால், அவரை உடனே தூக்கில் போட வேண்டும் என்று கோரி பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நபீஸ் ஜக்காரியா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " சர்வதேச நீதிமன்றம் கடந்த 18ம் தேதி பிறப்பித்த தற்காலிக உத்தரவைத் தொடர்ந்து, இந்திய ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இருப்பினும், முதலில் ராணுவ தளபதியிடமும், அடுத்து ஜனாதிபதியிடமும் கருணை கோரும் மனு உரிமையை தீர்த்துக்கொள்ளும் வரையில், குல்பூஷண்ஜாதவை தூக்கில் போட மாட்டோம். அவர் உயிருடன் இருப்பார்." என்று தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications