இந்தியா கொண்டுவர கோரும் வழக்கு.. லண்டன் கோர்ட்டில் ஆஜரானார் மல்லையா! குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
லண்டன்: பல கோடி கடன் பெற்று இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரும் மனு இன்று லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மல்லையா நேரில் ஆஜராகியுள்ளார்.
இந்தியாவிலுள்ள பல வங்கிகளில் சுமார் 9000 கோடி கடன் பாக்கி வைத்துள்ளவர் விஜய் மல்லையா. நெருக்கடி அதிகரித்ததும், மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதனிடையே இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான கிரிக்கெட் போட்டியை நேரில் வந்து பார்த்து இந்தியர்களை கோபமூட்டினார் மல்லையா. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியையும் நேரில் பார்த்தார்.

தீவிர நடவடிக்கை
இந்திய நீதிமன்றங்கள் பலவும் அவரை நேரில் ஆஜராகநோட்டீஸ் அனுப்பியும் அவர் மதிக்கவில்லை. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் மல்லையாவை இந்தியா கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஆலோசனை
இங்கிலாந்திலுள்ள சட்ட குழுவான, Crown Prosecution Service (CPS) உறுப்பினர்களுடன் சிபிஐ அதிகாரிகள் பல சுற்று ஆலோசனைகளை நடத்தியிருந்தனர். இந்திய அரசு சார்பில் இந்த அமைப்புதான் வாதிட உள்ளது.

இன்று விசாரணை
லண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், இன்று மாலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது விசாரணைக்கு மல்லையா நேரில் ஆஜராகினார். முன்னதாக தான் குற்றமற்றவன் என கூறிவருவதாகவும், அதையேத்தான் இப்போதும் சொல்வதாகவும் தெரிவித்தார் மல்லையா. எந்த நீதிமன்றத்தையும் தான் ஏமாற்றவில்லை என மல்லையா தெரிவித்தார். விசாரணை முடிவில் மல்லையாவை இந்தியா கொண்டு செல்ல நீதிமன்றம் அனுமதிக்குமா இல்லையா என்பது தெரியும்.

ஒரே குற்றவாளி
இந்தியா-இங்கிலாந்து நடுவே 1993ல் குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் கையெழுத்தானது. 2002ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான குற்றவாளி சமிராபாய் பட்டேல் கடந்த ஆண்டு இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டார். கடந்த 23 வருடங்களில் இதுதான் முதல் முறையாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications