டிமென்சியாவுக்கு எதிரான பாதுகாப்புக்கு உதவும் திருமணம்
திருமணமும், நெருங்கிய நண்பர்களை கொண்டிருப்பதும் டிமென்சியா எனப்படும் நினைவாற்றல் இழப்பு நோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்க உதவலாம் என்று லஃவ்பேரஃப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
6,677 வயதுவந்தோரை ஏழு ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து செய்யப்பட்ட இந்த ஆய்வு, மூப்பியல் சஞ்சிகை என்று பொருள்படும் "ஜெர்னல்ஸ் ஆப் ஜெரண்டாலஜி" என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு நபர் தொடர்பு வைத்திருக்கும் சமூக வட்டத்தின் அளவை விட அதன் தரமே மிக முக்கியமானது என்று தெரியவந்துள்ளதாக இந்த ஆய்வு அணியினர் தெரிவித்துள்ளனர்.
"பொருளுள்ள சமூக தொடர்புகளை" பராமரிக்க இது நோயாளிகளுக்கு மிகவும் உதவுகிறது என்று அல்சைமர்ஸ் சொசைட்டி கூறியுள்ளது.
இந்த ஆய்வை தொடங்கியபோது, இதில் ஈடுபட்டோரிடம் யாருக்கும் டிமென்சியா இருக்கவில்லை. ஆனால், தொடர் கண்காணிப்பின்போது, 220 பேருக்கு டிமென்சியா இருப்பது கண்டறியப்பட்டது.
டிமென்சியா வருவதற்கான ஆபத்தை சமூக வாழ்க்கை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிய தரும் துப்புகளை கண்டறிய,டிமென்சியா பெற்றிருப்போருக்கும், பெறாதோருக்கும் இடையிலான அறிகுறிகளை ஆய்வாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.
நண்பர்கள் என்று வருகிறபோது, நண்பர்களின் எண்ணிக்கையல்ல, தரமே மேலானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
"நீங்கள் மக்களால் சூழப்பட்டிருக்கலாம். ஆனால், எவ்வளவு பேரிடம் மிகவும் நெருக்கிய நட்பு வட்டத்தை கொண்டிருக்கிறீர்களோ, அந்த தரம்தான் டிமென்சியா உருவாகும் ஆபத்தை குறைக்கிறது. அதிகம் பேரிடம் நட்பு கொண்டிருக்கும் எண்ணிக்கை அல்ல" என்று பேராசிரியர் ஈஃப் ஹோகர்வோஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
மேசமான உடல் நலத்தோடு தொடர்புடையதாக இருக்கும் மன அழுத்த பாதிப்பின் சக்தியை குறைக்கின்ற சாதனமாக நெருங்கிய நட்பு வட்டாரம் இருப்பதாக அவர் கருதுகிறார்.
| டிமென்சியா ஆபத்திற்கு பங்காற்றும் 9 அம்சங்கள் | |
|---|---|
| அம்சங்கள் | ஆபத்துக்கு பங்காற்றும் சதவீதம் |
| நடு வயதில் செவிபுலன் திறனிழப்பு | 9 சதவீதம் |
| மேனிலை கல்வியை நிறைவு செய்ய தோல்வி | 8 சதவீதம் |
| புகைப்பிடித்தல் | 5 சதவீதம் |
| மன சோர்வுக்கு தொடக்கத்திலேயே சிகிச்சை பெற தோல்வி | 4 சதவீதம் |
| உடலளவில் இயக்கமின்மை | 3 சதவீதம் |
| சமூக தனிமை | 2 சதவீதம் |
| உயர் ரத்த அழுத்தம் | 2 சதவீதம் |
| உடல் பருமன் | 1 சதவீதம் |
| நீரிழிவு (வகை 2) | 1 சதவீதம் |
மாற்றியமைத்து கொள்ளலாம் என்று விவரிக்கப்படும் டிமன்சியா ஆபத்தை ஏற்படுத்தும் இந்த அம்சங்கள் 35 சதவீதம் வரையான ஆபத்துக்குதான் வழிவகுக்கிறது. பிற 65 சதவீத டிமென்சியா ஆபத்து மாற்ற முடியாத காரணங்களால் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
திருமணம் செய்தவர்களை விட தனியாக வாழ்பவர்களுக்கு டிமென்சியா ஏற்படும் ஆபத்து இரு மடங்கு அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
"ஒவ்வொரு 100 திருமணமாகாதோருக்கு மேலதிகமான ஒரு நோய் இருப்பதை என்பதை இது சுட்டுகிறது" என்று அல்சைமர் சொசைட்டியிலுள்ள ஆய்வு இயக்குநர் டாக்டர் டௌக் பிரவுன் தெரிவித்திருக்கிறார்.
மக்களை ஒரு குறிப்பிட காலத்திற்கு மட்டுமே கண்காணிக்கின்ற ஆய்வால், ஒரு நோய்க்கான முழு காரணத்தையும், விளைவுகளையும் நிரூபித்து விட முடியாது.
கண்டறிவதற்கு தசாப்தங்களுக்கு முன்னரே டிமென்சியா மூளையில் தொடங்கி விடுவதாக அறியப்படுகிறது. இதனால் மிகவும் முன்னதாகவே ஏற்படும் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களின் சமூக தொடர்பாடலை பாதிக்கலாம்.
எப்படி பார்த்தாலும், தனிமை என்பது டிமென்சியாவிற்கு உண்மையான ஒரு பிரச்சனையாக இருந்தது என்று டாக்டர் பிரவுன் கூறியுள்ளார்.
- மூளை ஆராய்ச்சியில் ஆச்சரியப்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகள்
- காணாமல் போன அமெரிக்க பெண் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி தெரியுமா?
- சர்க்கரை தடவிய இறைச்சி வறுவல் டிமென்ஷியா நோயை தோற்றுவிக்கும்
"மக்கள் சரியான ஆதரவு பெறாவிட்டால், டிமென்சியா நம்பமுடியாத வகையில் தனிமைப்படுத்தும் அனுபவமாக அமையலாம்" என்று அவர் கூறியுள்ளார்.
"பொருளுள்ள சமூக தொடர்புகளை பராமரிப்பதற்கும், அவர்கள் விருப்பம்போல வாழ்க்கையை தொடர்வதற்கும் டிமென்சியா பெற்றிருப்போருக்கு ஆதரவு அளிப்பது மிகவும் முக்கியமானது" என்று அவர் கூறியுள்ளார்.
தூங்காமலே இருந்தாலும் யானைகளின் நினைவாற்றல் நீடிப்பதெப்படி?
பிற செய்திகள்
- 30 பெண்களிடம் வேண்டுமென்றே எச்ஐவி பரப்பிய நபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை
- பாலியல் துன்புறுத்தல் பற்றி பெண்கள் ஏன் சமூக ஊடகங்களில் எழுதுகிறார்கள்?
- சினிமா விமர்சனம்: ஜியோஸ்டார்ம்
- மோதிரம் எந்த பெட்டியில் உள்ளது கண்டுபிடிக்க முடியுமா? புதிர் - 25
- காணாமல் போன 780 மொழிகளை கண்டறிந்த மொழி ஆர்வலர்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!














Click it and Unblock the Notifications