'புரியும் மொழியில் விடை..' அதிபரின் ட்வீட் நீக்கம்.. பதிலுக்கு ட்விட்டர் தளத்தையே தூக்கிய நைஜீரியா
அபுஜா: நைஜீரியா அதிபர் முகம்மது புஹாரியின் ட்வீட்டை அந்நிறுவனம் நீக்கிய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வதையில் ட்விட்டர் தளத்திற்கே நைஜீரியா அரசு தடை விதித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்திற்கு தற்போது பொல்லாத காலம் போலத் தெரிகிறது. பல்வேறு நாடுகளிலும், அந்நாட்டு அரசுகளுக்கும் ட்விட்டருக்கும் மோதல் போக்கே நிலவி வருகிறது.
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்திற்கும் ட்விட்டருக்கும் மோதல் நிலவி வந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். அதேபோல இந்தியாவிலும் புதிய டிஜிட்டல் விதிகள் தொடர்பாக மத்திய அரசுக்கும் ட்விட்டருக்கும் மோதல் நிலவி வருகிறது.

நைஜீரியா
இந்தச் சூழ்நிலையில், தற்போது ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியாவிலும் ட்விட்டர் நிறுவனத்திற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டின் அதிபராக உள்ளவர் முகம்மது புஹாரி. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் அதிபராக உள்ளார். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டு அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் தலைநகர் அபுஜா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நைஜீரியா
இந்தச் சூழ்நிலையில், தற்போது ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியாவிலும் ட்விட்டர் நிறுவனத்திற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டின் அதிபராக உள்ளவர் முகம்மது புஹாரி. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் அதிபராக உள்ளார். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டு அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் தலைநகர் அபுஜா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதிபர் முகம்மது புஹாரி
இதன் காரணமாக நைஜீரியாவில் உள்நாட்டு போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க அந்நாட்டு அதிபர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், நைஜீரியா அதிபர் முகம்மது புஹாரி 1967-1970 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போர் குறித்த சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

சர்ச்சை ட்வீட்
அந்த ட்வீட்டில் அதிபர் முகம்மது புஹாரி, ''அரசுக்கு எதிராக இன்று செயல்படும் இளைஞர்கள், நைஜீரியா உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் தேசம் குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது அரசுக்கு எதிராக செயல்படுவார்களுக்கு அவர்களுக்குப் புரியும் வகையில் பதில் கொடுக்கவும் தயாராகவே உள்ளோம்" என்று பொருள்படும் வகையில் பதிவிட்டிருந்தார்.

ட்விட்டர் நிறுவனத்திற்குத் தடை
அதிபர் முகம்மது புஹாரியின் ட்விட்டர் பதிவு போராட்டகார்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, ட்விட்டர் நிறுவனம் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டது. இதனால் கடுப்பான அதிபர் முகம்மது புஹாரி, ட்விட்டர் நிறுவனத்தையே நைஜீரியாவில் தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications