'வட கொரியாவுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல்' - டில்லர்சனுக்கு டிரம்ப் அறிவுரை
வட கொரியாவுடன் அந்நாட்டின் அணு ஆயுத திட்டம் குறித்து பேச்சு நடத்துவதன் மூலம் தனது நேரத்தை வீண் செய்வதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்ஸனிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவுடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், அதிபர் டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், ''உங்களின் சக்தியை சேமித்து வையுங்கள் , ரெக்ஸ். என்ன செய்ய வேண்டுமோ, அதை நாம் செய்வோம்'' என்று டிரம்ப் கூறியுள்ளார்.
வியாழக்கிழமையன்று வட கொரியாவுடன் அமெரிக்கா நேரடித் தொடர்பில் உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்ஸன் தெரிவித்தார்.
வட கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அண்மைய மாதங்களில், வட கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றன.
முன்னதாக, அமெரிக்காவை அச்சுறுத்துவதன்மூலம் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒரு 'தற்கொலை முயற்சியில்' ஈடுபட்டுள்ளார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்ததற்கு, "வயது மூப்பால் மனத் தளர்ச்சியுற்றுள்ள டிரம்ப் ஆயுதங்களின் மூலமாக வழிக்குக் கொண்டுவரப்படுவார்," என்று கிம் ஜோங் கூறியிருந்தார்.
சமீப மாதங்களில், வட கொரியா தொடர்ந்து ஆயுத சோதனைகளில் ஈடுபட்டதால் இந்த இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.
நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணையில் பொருத்தும் அளவில் உள்ள, சிறிய ரக ஹைட்ரஜன் குண்டு ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக கடந்த செப்டெம்பர் 3-ஆம் தேதி வட கொரியா கூறியிருந்தது.
சர்வேதச அளவில் அந்த ஆயுத சோதனைகள் கண்டிக்கப்பட்டதுடன், அவற்றை நிறுத்தகோரி வட கொரியா மீது ஐ.நா அவையால் பல தடைகளும் விதிக்கப்பட்டன.
வட கொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் அக்கறை காட்டிவரும் அதன் நெருங்கிய கூட்டாளியான சீனா, இந்த வாரம் தங்கள் நாட்டில் உள்ள வட கொரிய தொழில் நிறுவனங்கள் அனைத்துக்கும் தடை விதித்தது.
பிற செய்திகள் :
- மியான்மர் இந்துக்களை வரவேற்கும் வங்கதேச இந்துக்கள்!
- இலங்கை : புகைப் பழக்கத்திலிருந்து ஆண்களை விடுவிக்க ஐந்தாண்டு திட்டம்
- சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு: ஓ.பி.எஸ், ரஜினி, கமல் பங்கேற்பு
- ஆஸ்திரியாவில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிய தடை
- ஒருபாலின திருமண சட்டம் அமலான அன்றே மணம் முடித்த ஜெர்மானியர்கள்
- மும்பை ரயில் நிலையங்கள் மரண பொறிகளாக மாறியது ஏன்?
-
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
"நெற்றி கண் திறந்தாலும்.." மாஜி அதிபருக்கு 30 ஆண்டுகள் சிறை.. கண்கள் சிவந்த கொரிய நீதிமன்றம் -
டிரம்பின் கோல்டு காயின் பிசினஸ்.. அமெரிக்க அதிபர் சட்டத்தை மீறுகிறாரா? என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்














Click it and Unblock the Notifications