அணு ஆயுத சோதனையால் 200 பேர் செத்தாங்களா? இல்லவே இல்லை.. சத்தியம் செய்யும் வடகொரியா
அணு ஆயுத சோதனை மையத்தில் விபத்து என வெளியான செய்திக்கு வடகொரியா மறுப்பு தெரிவித்துள்ளது.
பியாங்ஜியாங்: அணு ஆயுத சோதனை மையத்தில் விபத்து என வெளியான செய்தியை வடகொரியா மறுத்துள்ளது.
வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பையும் அடிக்கடி அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. இதனால் வடகொரியா மீது ஐநா பொருளாதார தடையைவிதித்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா தனது அணு ஆயுத சோதனையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் வகையில் ராணுவ விமானங்களையும் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகிறது.

ஆறாவது முறையாக சோதனை
அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அணுஆயுத சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா கடநத் செப்டம்பர் 3ஆம் தேதி ஆறாவது முறையாக மிகப்பெரிய நிலத்தடி அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதனால் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 200 பேர் பலியானதாக ஜப்பான் நாட்டின் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இரு அணுகுண்டுகள் சோதனை
இது குறித்து ஜப்பானின் அசாகி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், செப்டம்பர் 3 ஆம் தேதி, வடகொரியா 6.3 ரிக்டர் அளவிலும் அதைத் தொடர்ந்து 4.3 ரிக்டர் அளவிலும் பூகம்பத்தை ஏற்படுத்தக்கூடிய சக்திகொண்ட இரு அணுகுண்டுகளைச் சோதனை செய்ததாக கூறியது.

120 கிலோ டன் எடை
அவை ஹிரோஷிமாவில் வீசப்பட்டதைக் காட்டிலும் 8 மடங்கு சக்தி வாய்ந்தவை. மேலும் 120 கிலோ டன் எடைகொண்டது என்றும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சுரங்கவிபத்தில் 200 பேர் பலி
இதனால் புங்கியாரி மலைப் பகுதியில் அணுகுண்டுச் சோதனை நடத்தும் சுரங்கம் இடிந்துவிழுந்ததில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். முதலில் 100 பேர் பலியான நிலையில், அதனை தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிகளின் போது மீண்டும் ஒருமுறை சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் மேலும் 100 பேர் என மொத்தம் 200 பேர் பலியாகியுள்ளதாக ஜப்பான் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

வடகொரிய அரசு ஊடகம் மறுப்பு
ஆனால் இதனை வடகொரியா தடாலடியாக மறுத்துள்ளது. வடகொரியாவின் 6-வது அணு ஆயுத சோதனையின் போது பலர் உயிரிழந்துவிட்டதாக வெளியான செய்தியை வடகொரியா அரசு ஊடகம் மறுத்து உள்ளது.

நவீன நிலையில் வடகொரியா
மேலும் அணுஆயுத சோதனை தொடர்பான வெளியான செய்திகள் தவறானவை என்றும் எங்களுடைய நாட்டிற்கு எதிராக அவதூறு பரப்புவதற்கான செய்தி என்றும் வடகொரியா கூறியுள்ளது. மேலும் வடகொரியா அணு ஆயுத மேம்பாட்டில் நவீன நிலையில் உள்ளது என தெரிவித்து உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications