சீனா - வடகொரியா இடையே சட்டவிரோத எண்ணெய் பரிமாற்றம்: டிரம்ப் குற்றச்சாட்டு
வடகொரியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சீனாவின் நடவடிக்கை தமக்கு "மிகுந்த வருத்தமளிப்பதாக" அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கை வெளிவந்ததையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், இதில் சீனா "கையும் களவுமாக பிடிபட்டுள்ளதாக" குறிப்பிட்டுள்ளார்.
பியாங்யாங்கிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுமானால், வடகொரியா நெருக்கடிக்கு "நட்புரீதியான தீர்வு" ஏற்படாது என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, வடகொரியா மீது ஐ.நா விதித்த எண்ணெய் தடைகளை மீறுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை சீனா மறுத்தது.
https://twitter.com/realDonaldTrump/status/946416486054285314
இந்நிலையில் கடந்த வாரம், வடகொரியாவில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை 90 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா வரையறுத்த ஐ.நா தீர்மானத்திற்கு சீனா ஆதரவு தெரிவித்தது.
வடகொரியாவின் சர்ச்சைக்குரிய ஏவுகணை சோதனைகளை கட்டுப்படுத்த முயற்சிக்கும் வகையில் இந்த புதிய தடைகள் விதிக்கப்பட்டன.
சீன டாங்கர்கள் மூலம் கடலில் உள்ள வடகொரிய கப்பல்களுக்கு எண்ணெய் விநியோகம் நடைபெறுவதாக தென்கொரியா செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டதை தொடர்ந்து அதிபர் டிரம்ப் சீனா மீது இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த அக்டோபரில் இருந்து, சீன - வடகொரியா கப்பல்களுக்கு இடையே சட்டவிரோதமான எண்ணெய் பரிமாற்றம் நடைபெற்றதை சுமார் 30 முறை அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள் படம்பிடித்ததாக தென் கொரியா அரசு அதிகாரிகள் குறிப்பிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எந்த தகவலையும் அமெரிக்கா இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இதுபோன்ற பறிமாற்றங்கள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
சட்டவிரோதமாக, கப்பல்களின் மூலம் வடகொரியாவிற்கு எண்ணெய் பரிமாற்றப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சீனா பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரென் க்வாவ்சியாங் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீங்கள் குறிப்பிடும் நிலைமை முற்றிலும் இல்லை" என்று மறுத்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அரசுத்துறை செய்தித் தொடர்பாளர் மைக்கெல் கெய்வி, வடகொரியாவுடனான பொருளாதார உறவுகளை முறித்துக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
"எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் பரிமாற்றம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட வடகொரியா உடனான அனைத்து பொருளாதார உறவுகளையும் முடித்து கொள்ளுமாறு" சீனாவை அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, அணு ஆயுதத் தாக்குதலில் ஈடுபட்டால் வடகொரியாவை "முற்றிலும் அழித்துவிடுவேன்" என டிரம்ப் மிரட்டல் விடுக்க, அவரை "மனநலம் பாதிக்கபட்டவர்" என வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் சாடினார்.
பிற செய்திகள்:
- 2017: அனிதா முதல் மித்தாலி வரை பெண்கள் கடந்து வந்த பாதை
- மும்பை: தீ விபத்தில் 15 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்
- பிரிட்டன்: பாரம்பரிய ஆற்றலை விஞ்சிய பசுமை ஆற்றல் உற்பத்தி
- முத்தலாக் விவகாரத்தில் பாஜக ஆர்வம் காட்டுவது ஏன்?
- ஆப்கானிஸ்தானில் இந்தியாவை தனிமைப்படுத்துகிறதா சீனா?
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்















Click it and Unblock the Notifications