சீனா வேண்டாம்.. சவுதிக்காவது வாங்க.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரீஃப்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு வழங்க நம் நாடு மறுத்து வருகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நம் நாட்டை பாகிஸ்தான் அழைத்து வரும் சூழலில் சீனா வேண்டாம். சவுதி அரேபியாவுக்காவது வாங்க பேசலாம் என்று நம் நாட்டிடம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கெஞ்சியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதற்கு பதிலடியாக ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நம் நாடு தொடங்கியது. பாகிஸ்தானுக்குள் ஏவுகணை தாக்குதல் நடத்தி 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மற்றும் 3 விமானப்படை தளங்களை நம் நாடு அழித்தது.

not-china-pakistan-pm-shehbaz-sharif-views-saudi-arabia-as-neutral-venue-for-talks-with-india

நம் நாட்டின் அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போனது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் நம்மை தாக்க முயன்ற நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டன. இதனால் வேறு வழியின்றி பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. மோதலை கைவிட வேண்டும். நாங்கள் இனி தாக்கமாட்டோம் என்று மண்டியிட்டது. இதையடுத்து நம் நாடும் ஒப்புக்கொண்டது. இதனால் இருநாடுகள் இடையேயான மோதல் என்பது முடிவுக்கு வந்துள்ளது.

ஆனாலும் கூட பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானுக்கு கொடுக்கும் சிந்து நதி நீரை தடுத்து வைத்துள்ளது. இந்த முடிவில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாகிஸ்தானை எடுத்து கொண்டால் சிந்து நதி நீர் என்பது மிகவும் முக்கியம். அங்கு வசிக்கும் 21 கோடி மக்களுக்கு இந்த நதி நீர் தான் முக்கியமானதாக உள்ளது. தற்போது இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையில் சண்டை முடிவுக்கு வந்ததால் சிந்து நிதி நீரை பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டும் என்று அந்த நாட்டு தலைவர்கள் கெஞ்சி வருகின்றனர்.

ஆனால் நம் நாடோ சிந்து நதி நீரை நிறுத்தியது நிறுத்தியது தான். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தினால் சிந்து நதி நீர் பற்றி யோசிக்கலாம் என்று கறாராக தெரிவித்துவிட்டது. அதுமட்டுமின்றி தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வெளிப்படையாக தெரிவித்து விட்டார்.

இருப்பினும் கூட க இருநாடுகள் இடையேயான பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம். இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். நம் நாட்டுடன் பேச்சுவார்த்தையை நடத்தி சிந்து நதி நீரை பெற்று விட வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. இது கடினமான விஷயம் தான் என்றாலும் கூட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அதனை விரும்புகிறார். ஆனால் நம் நாடு பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.

இந்நிலையில் தான் நம் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் கெஞ்சி வருகிறது. இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ‛‛இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். காஷ்மீர், தண்ணீர், வர்த்தகம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக பேச தயார். இந்த பேச்சுவார்த்தைக்கு சீனாவை வைக்க வேண்டாம். சவுதி அரேபியா என்பது இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு சரியான இடமாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் சவுதி அரேபியாவுக்காவது வாங்க பேசி பிரச்சனையை முடித்து கொள்ளலாம் என்று ஷெபாஸ் ஷெரீஃப் நம் நாட்டிடம் கெஞ்ச தொடங்கி உள்ளார். ஆனால் நம் நாட்டை பொறுத்தவரை பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+