பெனாசிர் பூட்டோவை கொல்ல நடந்த சதி.. பின்லேடனின் திட்டம்.. விஷயம் தெரிந்தும் அமைதி காத்த ராணுவம்
பெனாசிர் பூட்டோ கொல்லப்படுவதற்கு முன்பே பாகிஸ்தான் பாதுகாப்பு துறைக்கு அந்த விஷயம் தெரிந்து இருக்கிறது.
Recommended Video

இஸ்லாமாபாத்: பெனாசிர் பூட்டோ கொல்லப்படுவதற்கு முன்பே பாகிஸ்தான் பாதுகாப்பு துறைக்கு அந்த விஷயம் தெரிந்து இருக்கிறது. மேலும் அவர் எப்போது கொல்லப்படுவார், என்ன மாதிரியான திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றது என்றும் அவர்களுக்கு தெரிந்துள்ளது.
இந்த விஷயங்கள் அனைத்தும் தெரிந்தும் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை எதுவும் செய்யாமல் அமைதி காத்து இருக்கிறது. இதுகுறித்து எந்த விதமான எச்சரிக்கையும் பெனாசீர் பூட்டோவிற்கு அளிக்கப்படவில்லை.
சரியாக அவர் இறந்து பத்து வருடங்களுக்கு பின் தற்போது இந்த உண்மை வெளியே வந்து இருக்கிறது. பாகிஸ்தான் அரசின் அலட்சிய போக்கு குறித்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

பெனாசீர் பூட்டோ கொலை
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தவர் பெனாசீர் பூட்டோ. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் ராவல்பெண்டியில் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி வெளியானது.

திட்டம் என்ன
இந்த கொலையை செய்வதற்கு எல்லா திட்டமும் ஒசாமா பின் லேடன் மூலம் செய்யப்பட்டு இருக்கிறது. ஒசாமா இதற்காக ஆப்கானிஸ்தான் வந்து இருக்கிறார். அவர் தான் எப்போது என்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த விஷயம் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கிறது. ஒசாமா பின் லேடன் அனுப்பிய கொரியர் ஒன்றின் மூலம் இந்த தகவலை கண்டுபிடித்துள்ளனர்.

நடவடிக்கை இல்லை
இந்த செய்தி உளவுத்துறை மூலம் டிசம்பர் 19ம் தேதி பாகிஸ்தான் பாதுகாப்பு படைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் ''ஒசாமா பின் லேடன் பென்சீர் பூட்டோவை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார். இதற்காக இவர் இரண்டு பேரை பயன்படுத்த உள்ளார். டிசம்பர் 22ம் தேதியில் இருந்து இதற்கான பணிகள் நடக்க உள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த கடிதம் மீது பாகிஸ்தான் பாதுகாப்பு படை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முஷாரப்
இந்த சதி திட்டத்தில் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் பெயரும் இருந்துள்ளது. ஒசாமா பின்லேடன் இவரையும் கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறான். ஆனால் உளவுத்துறைக்கு தகவல் தெரிந்ததை அறிந்து கொண்ட பின் லேடன் இந்த திட்டத்தை கடைசியில் கைவிட்டு இருக்கிறான். அனைத்து தகவலும் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பாகிஸ்தான் அரசு மீது தற்போது உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications