ஓவரா இந்திய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய 10 பாகிஸ்தான் டிவி சேனல்களுக்கு ரூ.1 கோடி அபராதம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அதிக அளவில் ஒளிபரப்பிய 10 டிவி சேனல்களுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள டிவி சேனல்கள் 10 சதவீதம் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அந்நாட்டு தகவல் தொடர்பு துறை அனுமதி அளித்துள்ளது. அந்த 10 சதவீதத்தில் 60 சதவீதம் இந்தியா அல்லது பிற நாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் 40 சதவீதம் ஆங்கில நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம். இந்த விதிமுறையை டிவி சேனல்கள் பின்பற்றுகின்றனவா என்று பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு நிகழ்ச்சிகளை அதிக அளவில் ஒளிபரப்பிய ஹம் டிவி, ஆக்சிஜன் டிவி, கோஹினூர் என்டர்டெய்ன்மென்ட், என்டிவி என்டர்டெய்ன்மென்ட், ஜிஎக்ஸ்எம் என்டர்டெய்ன்மென்ட், ஜால்வா என்டர்டெய்ன்மென்ட் உள்ளிட்ட 10 டிவி சேனல்களுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இனி வரும் காலத்தில் இது போன்று விதிகளை மீறி செயல்படக் கூடாது என்று எச்சரித்து கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications