ஒலிம்பிக் அணிவகுப்பில்.. கொரோனா தடுப்பு விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்.. வறுக்கும் நெட்டிசன்கள்!
டோக்கியோ: 'ஒலிம்பிக் 2020' தொடக்க விழா அணிவகுப்பில் பாகிஸ்தான் வீரர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை. பாகிஸ்தான் குழுவினரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'ஒலிம்பிக் 2020' ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. கடந்த வருடமே நடக்க வேண்டிய இந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக ஒரு வருடம் தாமதமாக தற்போது நடக்கிறது.
கொரோனா அச்சுறுத்தல்கள், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளை மிக சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்று ஜப்பான் அரசு உறுதி பூண்டது.

புகுந்த கொரோனா
போட்டிக்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே ஒவ்வொன்றாக திட்டமிட்டு செய்தது. போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தங்கக்கூடிய ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மிக கடுமையாக பின்பற்றப்பட்டன. ஆனால் இதையும் மீறி ஒலிம்பிக் கிராமத்துக்குள் கொரோனா புகுந்தது. பாதிப்பு பெரிதாக இல்லையென்றாலும், தொற்று பரவி விடக்கூடாது என்பதில் ஜப்பான் முழு கவனத்துடன் இருந்தது.

தொடக்க விழா
டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக நடந்த தொடக்க விழாவில் மிக கடுமையான கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. தொடக்க விழாவில் ரசிகர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 204 நாடுகளின் அணி வீரர்கள் தங்களது நாட்டு தேசிய கொடியுடன் கம்பீரமாக வீறுநடை போட்டனர்.

மாஸ்க் கட்டாயம்
இவ்வாறு அணிவகுத்து செல்லும் வீரர்களும், அங்கு இருந்த தன்னார்வலர்கள், முக்கிய பிரமுகர்கள், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று கூறப்பட்டது. இதனை பெரும்பாலான நாட்டு வீரர்கள் பின்பற்ற பாகிஸ்தான் அணி வீரர்கள் கொரோனா விதிமுறைகளை மீறியது தற்போது தெரியவந்துள்ளது.

விதியை மீறிய பாகிஸ்தான்
தொடக்க விழா அணிவகுப்பில் பாகிஸ்தான் சார்பில் பேட்மிண்டன் வீராங்கனை மஹூர் ஷாஜாத், துப்பாக்கி சுடும் வீரர் கலீல் அக்தர் ஆகியோர் தலைமையேற்று தேசியகொடி ஏந்தி என்றனர். அப்போது வீராங்கனை மஹூர் ஷாஜாத் சரியாக மாஸ்க் அணியவில்லை. அவரது மாஸ்க் கன்னத்துக்கு கீழே சரிந்து இருந்தது. இதேபோல் கலீல் அக்தர் மாஸ்க் மூக்கினை மூடுவதற்கு பதிலாக வாயை மூடி இருந்தது.

நெட்டிசன்கள் கண்டனம்
இதேபோல் இந்த அணிவகுப்பில் சென்ற மற்றவர்களும் சரிவர மாஸ்க் அணியவில்லை. ஒலிம்பிக்கில் கடுமையான கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றி வரும் நிலையில் பாகிஸ்தான் குழுவினரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நெட்டிசன்கள் பாகிஸ்தான் வீரர்களை விட்டு விளாசி வருகின்றனர். இதேபோல் கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் அணிகளின் பெரும்பாலான உறுப்பினர்களும் அணிவகுப்பில் மாஸ்க் அணியாமல் சென்றுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications