வீடுகட்ட உருவப்படும் செங்கற்கள்..காணாமல் போகும் உலக அதிசய சீனப் பெருஞ்சுவர்...
பீஜிங் : உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் அண்மைக்காலமாக உள்ளூர் மக்களின் அலட்சியம் மற்றும் இயற்கை வானிலை காரணமாக 30% அளவுக்கு முற்றிலும் சேதமடைந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர் எவ்வித இடைவெளியும் இன்றி ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டதாகும். ஷான்ஹாய்குவானில் இருந்து ஜியாயூகுவான் கோபி பாலைவனம் வரை நீண்ட நெடிய தூரம் கொண்டது அந்த பெருஞ்சுவர்.

கி.மு. 3-ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட சீனப்பெருஞ்சுவரின் கட்டுமான பணிகளில் சுமார் 6,300 கிலோ மீட்டர்கள் 1368-1644-க்கு இடைப்பட்ட மிங் வம்சத்தினரால் கட்டப்பட்டது.
இதில், 1,962 கிலோ மீட்டர்கள் நீள சுவரானது பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், காற்று, மழை போன்ற இயற்கை வானிலை காரணத்தாலும், வலுவிழந்து சிதைந்துவிட்டது. 2014-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்தது.
இந்நிலையில், அங்கு வசிக்கும் உள்ளூர் மக்கள் சீனப்பெருஞ்சுவரில் உள்ள செங்கற்களை வீடு கட்டுவதற்கு திருடிச் சென்று விடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் அலட்சியமாக சீனப்பெருஞ்சுவருக்கு சேதத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் அங்குள்ள லூலாங் மாகாணத்தில் உள்ள ஏழை கிராம மக்கள் கடினமான, கருநிற சீனப்பெருஞ்சுவர் செங்கற்களை திருடி ஒரு செங்கல்லை 30 யுவானுக்கு உள்ளூரில் விற்றுவிடுகின்றனர்.
இதையடுத்து, செங்கற்களை திருடுவோருக்கு 5 ஆயிரம் யுவான் அபராதம் விதிக்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது.
சீனாவின் கலாச்சார, கட்டிடக்கலையை உலகிற்கு பறைசாற்றி வரும் சீனப்பெருஞ்சுவருக்கு நேர்ந்திருக்கும் இந்த ஆபத்து சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications