குரங்கு செல்ஃபி காப்புரிமை: சட்டப் போராட்டத்தில் வென்ற புகைப்பட கலைஞர்
''குரங்கு செல்ஃபி" புகைப்படம் தொடர்பாக விலங்குகள் நல உரிமைக் குழுவுக்கு எதிரான இரண்டு வருட சட்டப் போராட்டத்தில் வென்றுள்ளார் ஒரு புகைப்பட கலைஞர்.
2011-ம் ஆண்டு இந்தோனீசிய வனப்பகுதியில், பிரிட்டிஷ் புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டரின் காமராவைப் பறித்துக்கொண்ட 'நாருடோ' என்ற மக்காக் இன குரங்கு தன்னை தானே செல்ஃபி எடுத்துக்கொண்டது.
புகைப்படத்திற்கான காப்புரிமை பாதுகாப்பு குரங்குக்கு பொருந்தாது என அமெரிக்க நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், புகைப்படத்தின் மூலம் குரங்கும் பயனடைய வேண்டும் என பீட்டா கூறியிருந்தது.
"குரங்கு சார்பாக" பீட்டா செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், வருங்காலத்தில் இந்தப் புகைப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 25 சதவிகிதத்தை தானம் செய்ய புகைப்பட கலைஞர் டேவிட் ஒப்புக்கொண்டுள்ளார்.
குரங்கு செல்ஃபியை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 25 சதவிகித பணத்தை, நாருடோவின் வாழ்விடத்தைப் பாதுகாக்க பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு புகைப்படகலைஞர் டேவிட் அளிப்பார் என்று பீட்டாவும், டேவிட்டும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பீட்டாவின் இந்த வழக்கு விலங்குகளின் அடிப்படை உரிமைகள் குறித்து சர்வதேச விவாதத்திற்கு வழிவகுத்தது" என்கிறார் பீட்டாவின் வழக்கறிஞர் ஜெப் கேர்.
இதற்காக நிறைய முயற்சிகளில் ஈடுபட்டதாகவும், புகைப்படத்திற்கான காப்புரிமையை பெற்றதே தனக்கு போதுமானது என்றும் புகைப்பட கலைஞர் டேவிட் கூறியுள்ளார்.
'நாருடோ v டேவிட் ஸ்லேட்டர்' என இந்த வழக்கு பற்றி பேசப்படுகிறது. ஆனால், குரங்கின் அடையாளமும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.
புகைப்படத்தில் உள்ள குரங்கு, நாருடோ என்ற பெண் குரங்கு என பீட்டா கூறுகிறது. ஆனால் டேவிட்டோ, இது வேறு ஆண் குரங்கு என கூறுகிறார்.
இரண்டு வருட சட்டப்போராட்டத்திற்கு பிறகு சான் பிரான்சிஸ்கோவின் உள்ள அப்பீல் நீதிமன்றத்தின் நீதிபதிகள், டேவிட்டிற்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளனர்.
"இந்த வழக்கு மனிதர் அல்லாத விலங்குகளுக்கு சட்ட உரிமை வழங்குவது குறித்த முக்கிய பிரச்சனையை எழுப்பியுள்ளது" எனவும் பீட்டாவும், டேவிட்டும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- வட கொரியா மீது புதிய தடைகள்: ஐ.நா. விதிப்பு
- தன் மீதான பாலியல்ரீதியான துன்புறுத்தலை தானே பதிவு செய்த பெண்
- இலங்கை: சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்பட்ட யானை மரணம்
- பள்ளியில் இறந்து கிடந்த சிறுவன்: கேள்விக்குள்ளாகும் மாணவர்களின் பாதுகாப்பு
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications