மோடிக்குப் போன் போட்டுப் பேசிய சீனப் பிரதமர் கீகியாங்... புதிய வரலாறு!
பெய்ஜிங்: இந்திய சீன உறவுகளில் புதிய திருப்பமாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, சீனப் பிரதமரே போன் போட்டுப் பேசியுள்ளார்.
சீனத் தலைவர் ஒருவர், தானாகவே முன்வந்து இந்தியப் பிரதமரை போனில் அழைத்துப் பேசியது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அரிய நிகழ்வும் கூட இது.

சார்க் நாடுகளின் தலைவர்களை தனது பதவியேற்புக்கு நேரில் அழைத்து பதவியேற்பைக் காண வைத்து மனம் குளிரப் பேசி, வயிறு நிறைய விருந்து வைத்து அனுப்பி வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சீனப் பிரதமரே போன் செய்தது அரசு மட்டத்திலும், பாஜக மட்டத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பிற்பகலில் கீகியாங்கிடமிருந்து மோடிக்குப் போன் வந்தது. அப்போது மோடிக்கு, லோக்சபா தேர்தலில் அவரது கட்சியும், அவரும் வெற்றி பெற்றதற்கு கீகியாங் வாழ்த்து தெரிவித்தார். மேலும், புதிய இந்திய அரசு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்ற சீன மக்களின் விருப்பத்தையும் கீகியாங் மோடியிடம் தெரிவித்தார்.
கீகியாங்கின் வாழ்த்துக்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சீனாவுக்கு எப்போதுமே முதன்மை அளிக்கப்பட்டு வருவதையும் அப்போது சுட்டிக் காட்டியுள்ளார் மோடி.
இருதரப்பு உறவுகளையும், ஒத்துழைப்பையும் மேம்படுத்த தனது அரசு ஆர்வமாக இருப்பதாக பேச்சின்போது சுட்டிக் காட்டியுள்ளார் மோடி. மேலும் சீனாவுடன் இணைந்தும், நெருக்கமாகவும் செயல்பட ஆர்வமாக இருப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்கிடையே மாபெரும் பொருளாதார கூட்டுச் செயல்பாட்டின் அவசியத்தையும் மோடி வலியுறுத்தியுள்ளார். இரு நாட்டுத் தலைவர்களும் அடிக்கடி உயர் மட்ட அளவிலான தகவல் தொடரைப்ப பேணி வரவும் ஒப்புக் கொண்டனர்.
சீன அதிபர் ஸி ஜின்பிங் இந்த ஆண்டு கடைசியில் இந்தியா வர வேண்டும் என்ற அழைப்பையும் அப்போது கீகியாங்கிடம் மோடி விடுத்தார்.
பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் வெளிநாட்டுத் தலைவர் ஒருவருடன் தொலைபேசி மூலம் மோடி பேசியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications