கையை கட்டி வாயை பொத்தி.. வீட்டுக்குள் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..5 பேரை கொத்தாக தூக்கிய போலீசார்..!
சென்னை : சென்னை செங்குன்றத்தில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கொண்ட கும்பலை மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை லாரி ஓட்டுனராக உள்ளார். இவரது தாய் பிரிந்து சென்ற நிலையில், தனது 15 வயது அண்ணன் மற்றும் பாட்டியுடன் சிறுமி வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாடுகளுக்கு முன்னர் போதையில் சிறுமியின் வீட்டுக்கு வந்த 5 மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருந்த சிறுமியை மிரட்டி எழுப்பி 5 பேரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை
மேலும் கடந்த 2 மாதங்களாக போதை கும்பலைச் சேர்ந்த 5 பேரும் அடிக்கடி வீட்டுக்கு இரவு நேரத்தில் வந்து தாங்க முடியாத அளவுக்கு கொடுமை செய்து வந்துள்ளனர். அளவுக்கு அதிகமான போதையில், சிறுமிக்கு போதைக் கும்பலைச் சேர்ந்த 5 பேரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டு சிறுமி நடந்து கொள்ள வேண்டும் எனவும், அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

கொலை மிரட்டல்
இதுகுறித்து வெளியில் சொன்னாலோ , தங்கள் பேச்சை கேட்கவில்லை என்றால் சிறுமியை கொன்று விடுவோம் என்றும் அந்த போதைக் கும்பல் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பல நாட்களாக கொடுமை தொடர்ந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி இது குறித்து, அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

போலீசார் விசாரணை
முதலில் சிறுமி அளித்தது பொய் புகார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் உரிய விசாரணை நடத்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் மற்றும் மனநல நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கி விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதிரடி கைது
இந்த விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 21 வயதான கௌதம் ,லட்சுமணன், அப்துல், அக்பர், பாபு ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி புகார் கொடுத்த அடுத்த நாளே 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சிறுமிக்கு 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications