போலீஸ் நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த மர்மநபர்: சுட்டுக் கொன்றது பாரீஸ் போலீஸ் !
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கத்தியுடன் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த மர்மநபரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் கடந்த நவம்பர் மாதம் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பாரீசின் வடக்கு பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் கத்தியுடன் அடையாளம் தெரியாத மனிதர் ஒருவர் திடீரென நுழைந்துள்ளார். நுழைவு வாயிலை தாண்டிச் செல்லும் போது 'அல்லாஹூ அக்பர்' என்று கோஷமிட்டபடி சென்றுள்ளார்.
உள்ளே நுழைந்த அந்த மனிதர் உடலில் தற்கொலை வெடிகுண்டு பெல்ட் கட்டியிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் நுழைந்த அந்த மனிதரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பாரிசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தாக்குதலுக்கான பெல்ட் போன்று ஏதோ ஒன்று அடையாள தெரியாத அந்த மனிதரின் சட்டைக்குள் துருத்திக் கொண்டிருந்ததாகவும் பிரான்சின் உள்துறை அமைச்சர் பெய்ர்ரி ஹென்றி கூறினார்.












Click it and Unblock the Notifications