நூறு பில்லியன் டாலர் ஊழல்: சிக்கலில் செளதி இளவரசர்கள் மற்றும் அமைச்சர்கள்
கடந்த சில ஆண்டுகளாக, திட்டமிடப்பட்ட ஊழல் மற்றும் கையாடல் செய்ததன் மூலம் குறைந்தது 100 பில்லியன் டாலர் நிதி தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக செளதி அரேபியாவின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக தற்போது 201 பேர் விசாரிக்கப்பட உள்ளார்கள் என்கிறார் ஷேய்க் செளத் அல்-மொஜீப்.
- ஆடம்பர சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள செளதி இளவரசர்கள்
- ஏமனில் பேரழிவு நிலையை எதிர்கொண்டுள்ள லட்சக்கணக்கான உயிர்கள்
- பாலைவனத்தில் 100 மில்லியன் டாலரில் ஓய்வு விடுதி கட்டிய செளதி இளவரசரை பற்றி தெரியுமா?
யாரெல்லாம் விசாரணைக்கு உட்படுத்தப்பட போகிறார்கள் என்ற பெயர் விவரத்தை அவர் வெளியிடவில்லை, ஆனால் சில மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் செல்வாக்குள்ள தொழிலதிபர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
''இந்த தவறுகளை இழைத்தவர்களுக்கு எதிரான ஆதாரம் வலுவாக உள்ளது,'' என்கிறார் ஷேய்க் மொஜீப்.
அதேசமயம், ஊழலுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளால் செளதியில் வர்த்தக நடவடிக்கைகளில் எதுவும் பாதிக்கப்படவில்லை என்பதை வலியுறுத்திய மொஜீப், பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் சொந்த வங்கிக் கணக்குகள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
32 வயதாகும் செளதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு உயர்மட்ட குழுவின் நடவடிக்கைகள் வேகமெடுத்து வருவதாக மொஜீப் தெரிவித்துள்ளார்.
இதுவரை விசாரணைக்காக 208 தனிநபர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் மட்டுமே குற்றச்சாட்டுகளின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மொஜீப் அறிவித்தார்.
பிற செய்திகள்:
- கடைசி முகலாய பேரரசர் என்ன ஆனார்...?
- பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு டிரம்ப் புகழாரம்
- பாரடைஸ் பேப்பர்ஸ்: காலநிலை கொள்கை மீது செல்வாக்கு செலுத்த முயன்ற இளவரசர் சார்லஸ்
- சுவாச சோதனை மூலம் மலேரியா நோய் பாதிப்பை கண்டறியலாம்!