ஓமனில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 4 தமிழர்கள் உள்பட 7 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மஸ்கட்: ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 4 தமிழர்கள் உள்பட 7 பேர் பலியானார்கள்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இன்று அதிகாலையில் சலாலா நோக்கி பல நாட்டுத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினருடன் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. விலாயட் ஹெய்மா என்ற இடத்தில் பஸ் வந்தபோது எதிர் திசையில் வந்த காருடன் பயங்கரமாக மோதியது.

Seven killed, several injured in Salalah -bound bus accident

பஸ்சில் 30 பேர் இருந்தனர். இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்தில் இறந்தவர்களில் 3 பேர் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்ற நால்வரும் தமிழர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னொருவரின் உடல் அடையாளம் காணப்படாமல் உள்ளது. விபத்தில் 27 பேர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய கார் உருக்குலைந்து போய் விட்டது. காயமடைந்தவர்கள் நிஸ்வா மருத்துவமனை மற்றும் ஹெய்மா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+