பிரான்ஸ் நாட்டு பள்ளிக்கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு.. பாதுகாப்பு படை விரைந்தது
துப்பாக்கி சூட்டில் 3 நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பலர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
Subscribe to Oneindia Tamil
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டு பள்ளிக்குள் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் க்ராஸ்சே பகுதியுள்ள டக்யூவில்லே உயர்நிலைப் பள்ளியில் மர்ம நபர்கள் திடீரென நுழைந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் 3 நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பலர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரையில் காயமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை.
சம்பவம் குறித்து அறிந்ததும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் எச்சரித்திருந்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications